BREAKING NEWS

Like Us

Sunday, May 3, 2009

இப்போதாவது Slumdog Millionaire பார்த்து விட்டீர்களா?

இந்த படத்துக்கு அஸ்கர் கிடைப்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன் நான் எழுதிய விமர்சனம் இது. தமிலிஷ் இணையதளத்தில் பதின்எழு வோட்டுக்கள் உள்ளடங்கலாக என்னையும் ஒரு பதிவராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெற்ற பதிவு இது. அன்று நான் எழுதும் போதுபலபேர் இந்த படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் . இன்று பல மொழிகளிலும் வெளியாகி பலரும் பார்த்திருப்பார்கள் என்ற அடிப்படையில் மீண்டும் பிரசுரம் செய்கிறேன்.

""இந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ.ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றியும் , அவர் இசை அமைத்த Slumdog millionire பற்றியுமான அதிகபடியான தேடல்கள். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் படம், குறைந்தது 8 விருதுகளையாவது அள்ளிவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த அளவு தரத்துடன் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது உள்பட நான்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.அமைதியாக வந்த அந்த படம் எ.ஆர். ரஹுமான் ஆல் ஏக எதிர்பார்ப்புக்களை உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கிறது. அது அவருக்கு மட்டுமேயான தனித்துவமான திறமையால் சாத்தியமாகி இருக்கிறது , அவரின் திறமையை குறைத்துக் கூறுவது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்த படம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளையும் , அது தொடர்பாக என் கேள்விகளையும் பதிவு செய்வதே எனது நோக்கம்.


என் பார்வையில் , இந்த படம் இந்தியாவின் , அதன் மக்களின் மிக அசிங்கமான ஒரு மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்தியர்கள் மட்டும் பார்த்து , தெரிந்து, மறைத்து வந்த பல விடயங்கள் இந்த படம் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு வரப்போகிறது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன் , ஒரு உபகண்டமாக , உலகின் அடுத்த வல்லரசு எண்டு சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.

மிக திறமையான இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்குதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவரின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதி இன்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், இன ரீதியான சண்டைகள் , வேட்டுகுத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம் , அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டுவது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான ரெசுல் பூக்குட்டி என்பவரது பெயரும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை கவ்ரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அறிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.


முதல் சந்தேகம் , எ.ஆர். ரஹுமான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்பட இல்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?


படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கத பாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்பட இல்லை. ஹீரோவை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் நெகடிவ் ஆக இருப்பதற்கு காரணம் என்ன ...? அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அணில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும். சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொரூரம்? இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனர் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திராந்கலிநூடாக தான் கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுகிறார். அந்த காட்சிகள் கூட இந்திய போலீஸ் காரரின் கேவலத்தை நன்கு பறைசாற்றுகிறார் இயக்குனர். இப்படியான காட்சி அமைப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு கட்டாயம் தேவை தானா?


அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள், மற்றைய நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள் ?


இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார் படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்? வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்றைய இந்திய நகரங்கள் பற்றி ? இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழுகிறது .

ஆனாலும் இயக்குனர் பொய்யான ஒன்றை கட்டவில்லை, நிஜமான பல விடயங்களையே கட்ட்சிப்படுத்தியிருக்கிறார். நாம் சென்று அமெரிக்க போன்ற நாடுகளின் மக்களையும் , மனிதர்களையும் கேவலமாக பிரதிபலித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா ? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?


இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் ஒன்றுக்கும் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய எதாதிபதியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். எனவே விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலிய படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெற்றிருக்கிறது. இனிமேல் கமல்ஹசன் போன்றோரும் இந்தியாவை விமர்சித்து படம் நடித்தால் ஆஸ்கார் விருதுகள் வெகு தொலைவில் இருக்காது"".

Share this:

kapilan said...

enna repeata?

kapilan

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes