BREAKING NEWS

Like Us

Wednesday, December 10, 2008

அமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.


அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவையும், பிறகு ஜப்பானையும் அதன் பிறகு சீனா, இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகமுக்கியம்மான ஜீவராசியாகிய என்னையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. நாலு வருடங்கள் பட்டப்படிப்பு எண்டு ஒன்றை படித்து விட்டு, எதோ ஒரு பல்தேசிய நிறுவனத்தில் முகாமைத்துவ மேலாளராக, கொழும்பின் எதோ ஒரு கட்டடத்தின் பதினெட்டாவது மாடியிலிருந்து கடலைப் பார்க்கும் என் கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பெரிய நிறுவனங்களின் ஆள்குறைப்பு, அடி மாட்டு சம்பளத்தில் என்னை சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கும் கஞ்ச கம்பெனிகளின் மனிதர்கள் எண்டு நிறைய விடயங்கள் என் தூங்காத இரவுகளை பயமுறுத்துவதால் மேற்சொன்ன கனவுகள் இப்போது வருவதில்லை. எனவே இந்த நிதி நெருக்கடிகளின் விளைவுகளை மல்லாக்க படுத்து சுஜாதா STYLE லில் யோசித்து பார்த்தேன் .....விளைவு.


நிதி நெருக்கடியின் விளைவு , நிறைய பேர் இலங்கையிலும் வெகு விரைவில் வேலை இழப்பர். இந்த நிலைமை அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொடரலாம். ஏற்கனவே அரசின் அழுத்தங்களால் NGO க்கள் வெளியேறிவிட நிலையில், பல பல்தேசியக் கம்பனிகளும் அடுத்துவரும் வாரங்களின் தனது ஆள் குறைஇப்புக்களை அறிவிக்கும். தொடர்ந்து OUTSOURCING, BACK OFFICE எண்டு சொல்லுவோரும் பெட்டி கட்டுவர். எனவே இனிவரும் EMEGENCY காலத்தில் பொருளாதாரம் தொடர்பாக மிகவும் அபாரமாக செயற்படும் இலங்கை அரசு வேலை தொடர்பான வாக்குறுதிகளையும் தன்னுடைய செய்திகளில் ஸ்பெஷல் செக்மேன்டாக சேர்த்துக்கொள்ளும். ஏற்கனவே நிறைய ஸ்பெஷல் செக்மேன்ட் காட்டி மக்களை பெக்கட்டுவதுபோல.


வேலை வெட்டி இல்லாத நிறைய பேர் ஒரே வேலையை குறிவைத்து களத்தில் குதிப்பர்....ஒரு பொருளை நிறயா பணம் துரத்துவது பணவீக்கம் (inflation)என்பது போல் (இங்கு பொருளின் விலை அதிகரித்து செல்லும்) ஒரு வேலையை நிறைய மனிதர்கள் துரத்தினால் குறித்த வேலை தொடர்பான சம்பளம் குறையும். இந்த நிலைமையை நாங்கள் வேலைவீக்கம் (EMPLATION)எண்டு இனிமேல் அழைக்கலாம். இந்த நிலைமையில் 30000 பெறுமதியான வேலையை 10000 க்கும் செய்வதற்கு தகுதியான ஆள் கிடைக்கலாம். (இந்த புதிய தத்துவத்தை நான் தான் முதலில் கண்டு பிடித்தேன், வாசகர்கள் plagiarism எண்டு குற்றம் சாட்டுவதானால் தகுந்த ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும்) . இதனால் பொருளாதாரம் downsize அடைந்து மக்களின் கொள்வனவு ஆற்றல் குறையும். அது சகல துறைகளையும் பாதிக்கும்.கொள்வனவு ஆற்றல் குறைந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து நல்ல economics புத்தகம் எடுத்து வாசிக்கவும்..


இங்க என்ன நடந்தாலும் பரவாயில்லை, எனக்கு ஏன்டா மாமா வெளிநாடுல இருக்கிறார் எண்டு கிளம்ப இருப்போர் கவனத்துக்கு, இத விட மோசமான நிலை தான் அங்க இருக்கு..பெட்ரோல் அடிக்கும் வேலையையும் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக்கொல்வதாய் கேள்வி...எனவே வாழமுடியாமல் கிளர்ச்சிகள் வெடிக்கும், வெளிநாடுகளில் வேலை சார்ந்ததாய் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் உருவெடுக்கும்.. இதனால் குடிவரவு கொள்கைகளில் கூட மாறுதல்கள் வரலாம்....வெள்ளைக்காரன் ஆசிய நாட்டவர் மோதல் எண்டு செய்திகள் வரலாம் ...சாப்பாட்டுக்காகவும் கொவ்ரவத்துக்க்ககவும் மனிதன் எந்த நிலைக்கும் செல்வான், அந்த நிலைகளை இனிவரும் கால உலகம் நிறையவே காண வேண்டி இருக்கும்......நவீன மனிதனின் அத்தனை துறைகளிலும் நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட கிளை பிரச்சினைகளும் கொழுந்துவிட்டு எரியும்


80 பதுகளில் வந்தது போன்று வேலை இல்லா பிரச்னையை மையமாக வைத்து தமிழ் திரைப்படங்கள் வரும்...உலக நாயகன் கமலஹாசன் "எருமையின் நிறம் கருப்பு " எண்டு படம் நடிக்கலாம்...அப்போதும் கூட நானும் ரிஷாங்கனும் SREYA வுக்குப் பதில் தம்மனாவ போட்டிருக்கலாம் என்று சிலாகித்து பேசிக்கொண்டு இருக்கலாம்............WILL SEE

Share this:

Anonymous said...

hi sutha

It s a really a good effort and a masterpiece of writing.

Don t worry even u have a key board to explore ur thoughts fascinatingly.

Just a personal comment u can follow diploma in Journalism in our uni and sharpen ur writing skills if u want.

Any way a very good attempt. I njoyed well


Duvaraga

Anonymous said...

Great work.... hats off sutha..... hope u wont stop this.... please continue..... very interesting......
the language u use... is really fascinatingas Duvaraga said...

Shankar

Anonymous said...

Hi!

I think only u can think lyk this

Best part is Emplation. rilly superb

I Liked it hope every 1 will lyk it


Gopan

Sutha said...

thanks for your comments...
its really encouraging me a lot

Anonymous said...

இயற்கையாக சிந்திக்கவும் வைத்து சிரிக்கவும் வைத்த படைப்பு. அருமை எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள். this style is good continue like this...

Udesh Cj said...

இது போன்ற தமிழ் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் ...ஆனந்த விகடனில் வரும் கட்டுரைகள் போன்று உள்ளது ... நிதி நெருகடியும் தமிழ் சினிமா பற்றிய அலசலும் இக்கதையை மெருகூடியுளது.... Keep up the good work !!!

umaram said...

நல்ல ஆக்கம் , தொடர்ந்து எழுதுங்கள்........

Anonymous said...

anna,Im impressed wth ur writng...

I reeely lk '' naaan nee enum muranpaaatu muyatsi''..... started likn it 4rm da very 1st tm i rd t n da magazine.

and specially da financial thng ws awesm!! i lk da emplation part n da ending!!

keeep wrtng.. n keep entertaing us.... lukn forwrd 2 many mor lk dese...//

Sutha said...

after ur all support and encouragement..i tring to write more...need ur view for ever..

thanks a lot frns,brothers and sisters

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes