BREAKING NEWS

Like Us

Thursday, May 7, 2009

உணர்வு எப்போது தான் ஒற்றுமைப்பட்டு வருமோ?

அன்றாட வாழ்க்கையில மிகவும் வேதனையான ஒன்று, எதாவது ஒன்ற பெறுவதற்காக வரிசையில் நிற்பது அல்லது யாராவது ஒருவருக்காக காத்திருப்பது. அப்படி இருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் எரிச்சல் தருகின்ற ஒரு அனுபவமாக அமையும். தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒவ்வொருவரும் இலங்கை போன்ற நாட்டில் பல விடயங்களுக்காக வரிசையில் நிண்டு பழக்கப்பட்டு விட்டோம். அது எம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது.

இதிலும் நான் அதிகம் வெறுக்கும் ஒன்று வங்கிகளுக்கு செல்வது, அதும் வெள்ளவத்தையில் உள்ள வங்கிகளுக்கு செல்வது. இலங்கையிலே வைப்பில் இடுவதற்கோ மீளப் பெருவதக்கோ மக்கள் அதிகம் வரிசையில் நிற்பது வெள்ளவத்தை வங்கிகளாக தான் இருக்கும் . எங்கட சனத்துக்கு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வெளிநாட்டுல இருந்து அனுப்புறத வைப்பில் இடுறதும்
மீள பெறுவதும் அன்றாட வாடிக்கைகள். இப்படி எடுக்கிற நிறைய பெருசுகளுக்கு வங்கி சீட்டுகல ஒழுங்கா நிரப்பவும் தெரியாததால வெள்ளவத்தை வங்கிகளின் வரிசைகள் மேக மெதுவாகவே நகரும்( ATM கூட operate பண்ண தெரியாது). அதிலும் எங்கட ஆக்களுண்ட ஆஸ்தான வங்கி HNB யும் கமர்ஷியல் வங்கியும் தான் , இதில் ஒவ்வொரு நாளும் நிக்கிற கூட்டத்தை பற்றி கேட்கவே தேவை இல்லை. அதிலும் சில வங்கி உத்தியோகத்தர்களின் அலம்பல் தாங்க முடிவதில்லை . வாடிக்கையாளர்கள் வரிசையில் நிக்க போனில் தண்ட போடியனோல அல்லது பிள்ளையோல பேசிக்கொண்டு இருப்பார்கள். சில நேரம் மேலதிகாரி கைஎழுத்து வைக்க வேண்டும் எண்டு காக்க வைப்பார்கள்.

இதனாலேயே இந்த இரண்டு வங்கிகளுக்கும் போவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். PABC போன்ற சிறிய வங்கிகளில் கூட்டம் இல்லாததால் எங்கட வேலையை சட்டு புட்டுன்னு முடித்து விட்டு வந்துடலாம். செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது எண்டு ஆகியபிறகு இப்படி வரிசைகளையும் கூட்டத்தையும் கண்டால் பெரிய வெறுப்பு தான் வரும்.

ஸ்கூல் காலத்துலயும் மாணவர் தலைவர்கள் பிடித்து வைத்து ஒவ்வொரு வகுப்பா வரிசையில் அனுப்பும், பாடசாலை முடிந்த பின் வரும் அந்த பத்து பதினைந்து நிமிடங்கள் வெறுப்பின் உச்சமாவே இருக்கும். பின் நான் மாணவ தலைவனாக வந்த பிறகு 5ஆம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களை வரிசையில் அனுப்பி வைக்கும் பணி என்னுடையது, எப்படி அவர்களை விரைவாகவும் ஒழுங்காகவும் அனுப்புவது எண்டு தலையை பிய்த்து யோசித்திருக்கிறேன், ஆயிரம் ஆயிரத்து இருநூறு வரையான மாணவர்களை, அதுவும் சிறிய மாணவர்களை அனுப்புவது என்பது லேசுப்பட்ட விடயம் இல்லை , கோசம் பிசகினாலும் நெரித்து அடித்துக்கொண்டு ஓடுவார்கள், கை முறிந்த மூச்சு திணறல் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது. அப்படி ஏதும் நடந்தால் பெற்றோர் அடுத்த நாள் வந்து ருத்ர தாண்டவம் ஆடுவார்கள். அந்த காலங்களில் கூட அந்த குறிப்பிட்ட நேரங்களில் வரிசை பற்றியே யோசனை எல்லாம் இருக்கும். இப்படி எங்கட என்றாட வாழ்வை திட்டமிடுதலில் வரிசைகளுக்கும் , கூட்ட நெரிசலுக்கும் நாம் அதிகம் முக்கியம் தருகிறோம்.

கடந்த வாரம் கூட ஒரு நிகழ்ச்சியில் இடண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நிண்டு ஏன் வேலை ஒன்றை முடிக்கவேண்டி இருந்தது. ஒவ்வருவரும் நான் முந்தி நீ முந்தி வரிசையை கொழப்பி அடித்ததால் பெரிய எரிச்சலாக இருந்தது. அந்தநேரத்தின் வலிகள் வார்த்தைகளில் வராது. அப்போது யோசித்து கொண்டேன் ,


















எம் இனம் இது போலதான் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு எரிக்கும் வெய்யிலில் கோப்பைகளை ஏந்தி கொண்டு வரிசையில் நிற்கும் வேதனை எப்படி வலிக்கும். ஒவ்வொரு மனிதனும் சராசரியாக இரண்டு மணித்தியாலம் ஆகிறதாம். இதில் குழந்தைகள் , வயோதிபர் வேறு .சில நேரம் கடைசி ஆளுக்கு சாப்பாடு கிடைக்க 5மணி ஆகிறதாம். அதுவும் பசியுடன் வெய்யிலில் நிக்க வைத்து பழிவாங்கும் கொடுமையை மனிதாபி மானத்துன் யோசிக்க கூட தமிழனாய் பிறந்த அவர்களுக்கு ஒரு அரசியல் தலைமை கூட இல்லை. கழிப்பிடம் போவதுக்கு கூட நீண்டவரிசையாம்.

அவர்கள் வசதியாய் வாழ்ந்தவர்களும் கூட, அவர்களின் அந்த வலியும் வேதனையும் தீர்த்து வைக்க நாமாகவே குறைந்த பட்சமாகவேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எப்படி என்பதற்கு ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் , அதையும் தாண்டி உணர்வு வேண்டும். அந்த உணர்வு எப்போது தான் ஒற்றுமைப்பட்டு வருமோ?

Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes