
ஆனந்த விகடனில் வெளிவந்த உலக சினிமா மூலமானது, உங்கள் எழுத்துக்கள் மீதான என் பிரியம். வெளிவந்த காலம் முதலே விகடனில் தேடி வாசிக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்று. எழுத்துக்களின் இனிமையும், உங்களுக்கு மட்டுமேயான சில பல விடயங்களும் ஒளிப்பதிவாளர் என்ற முகம் மறந்து ஒரு எழுத்தாளராகவே அதிகம் என்னை கவர்ந்திருக்கின்றன.
"பேசும்படம்" என்ற அந்த புத்தகத்தை நல்ல சினிமா மீதான என் ரசிக்கும் தன்மையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதட்ககாவே பணம் கொடுத்து வாங்கினேன். அந்த எதிர்பார்ப்புக்களை நிறையவே பூர்த்தி செய்து இருக்கிறது புத்தகம் என்பது தொடர்பில் எனக்கு மகிழ்ச்சி. கட்டுரைகளும் விமரிசனங்களும் நிறையவே வித்தியாசமாக சிந்திக்க தூண்டுகிறது. திரைக்கு பின்புலத்தில் இருக்கும் உழைப்பும் , ஏக்கமும் புரிகிறது. இரண்டு ஆசிரியர்கள் ஒரு நதிக்கரை என்ற பகுதி அருமையாக உள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் விமரிசனத்துடன் உடன்பட முடியவில்லை ...மன்னிக்கவும். தொடர்ந்தும் உங்கள் எழுத்துக்கள் வாசிக்க ஆர்வமாய் உள்ளேன்.
Post a Comment