BREAKING NEWS

Like Us

Wednesday, July 29, 2009

அர்த்தம் உள்ள இந்து மதம் : எழுதுவது அனானி

இந்து மதத்தில் அர்த்தம் உண்டா என்று கேட்டு ஒரு பதிவு எழுதியிருந்தேன், பல பேருக்கு அசொகரிகங்களையும் , வெறுப்புக்களையும் கொடுக்கும் சர்ச்சையான விஷயம் தான்.
அனாலும் பல பேர் அதை வாசித்து பாராட்டியும் இருந்தனர். சில பேர் ஏன் கருத்தை மறுதலித்து பின்னூட்டம் இட்டிருந்தனர். அப்படி ஒரு நியாயமானதும் , பக்குவமானதுமான ஒரு பின்னூட்டம் ஒரு அநோனியிடம் இருந்து வந்தது. எப்படி எனக்கு பலரின் நம்பிக்கைககளை கேள்வி கேட்க உரிமை உள்ளதோ, அந்த நம்பிக்கைகளை நிலை நிறுத்த உரிமை அநோனிக்கு கூட உள்ளது என்பதால் அவரின் மறுப்பு கருத்துக்களை ஒரு பதிவாக்குகிறேன். ( அனோனி அனுமதிப்பாராக)



சிந்தனையை தூண்டும் கருத்துக்களுக்கு நன்றி. என்னுள் தோன்றிய சில கருத்துக்களை பரிமாற அவா கொண்டு இந்த பதிவு. என்னுடைய கருத்துகள் பழமையானவையாய் இருந்தாலும் நான் மாற்றங்களை ஏற்று கொள்பவனே! தேங்காயை 40/= மதிப்புள்ள உணவாக நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் வேறு எந்த பழத்திலும் இல்லாத தனித்துவம் அதற்கு உண்டு. அது தான் அக்கண்கள். அதனை உடைக்கும் போது எம்முள் உள்ள ஆணவம், சுயநலம், ஆசை, பொறாமை போன்ற தீய குணங்களை உடைத்து இறைவனுக்கு அற்பனிக்கின்றோம்.


பால் குடம் பற்றி கூறியிருந்தீர்கள். எமது பாவங்களை எல்லாம் அவள் தனதாக ஏற்று கொண்டு அருள்கடாட்சம் புரியும் அவளிடம் எம்மால் வந்த பாவங்களை அந்த பாலாபிஷேகம் மூலம் தீர்க்கிறோம். அதனை நாம் பெற்று இல்லாதோருக்கு கொடுப்பது அந்த பாவங்களை கொடுப்பது போன்றது என்கிறது சிவா மரபு.கிரனைட் கல்லால் கோயில் கட்டுகிறார்கள், நாற்பது லட்சம் செலவில் தேர் கட்டுகிறார்கள் , கடவுள் சிலைக்கு வைர அட்டியல் போடுகிறார்கள். இதை எல்லாம் கடவுள் கேட்டாரா? அந்த அம்மன் 1987 ஆம் ஆண்டு எப்படி இருந்தால் என்று எனக்கு தெரியும். பக்தர்கள் பெருக பெருக, கோவில் வளர்ச்சி அடையும். அந்த அம்மன் கோவில் நிர்வாகம் நடாத்தும் அறநெறி பாடசாலையில் இலவசமாக எத்தனை மாணவர்கள் சைவம் பயில்கிறார்கள்? கலைகூடத்திலும் தியான மண்டபத்திலும், நூலகத்திலும் எத்துனை விடயங்களை அமைதியை பெறுகின்றோம். கோவில் வளர்ச்சி பெற்றது தவறா? நீங்கள் கூறுவதை பார்த்தால் i.b.c road பிள்ளையார் கோவில் மட்டும் தான் கோவிலா? அதுவும் சிறிது காலத்தில் வளர்ச்சி அடைந்த பின் என்ன கூறுவீர்கள்? கோவில் குருக்கள் கலோரி பற்றியோ அல்லது போஷாக்கின்மை பற்றியோ அறிந்திருக்கவில்லை மாறாக அவர் அந்த மக்களுக்காக இறைவனிடம் தினம் பிரார்த்திப்பார் அது தான் அவர் வேலை.


பிசைகாரகளுக்கு நாம் கொடுக்கும் வரை அவர்கள் இவ்வுலகில் இருப்பார்கள். அப்படி ஒரு சமுதாயத்தைச் உருவாகிய பெருமை எமக்கே சேரும். எம்மிலிருந்து அவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள். தீண்டத்தகாதவர்களா? அவர்கள் தொழில் செய்ய முடியாதா? அவளை ஸோம்பெரி ஆக்கியது மட்டுமல்லாது அவள் மகளையும் கண்ணிருந்தும் குருடனாக்குகிறது உங்கள் சமூகம். காத்திருந்து செவிடனாகுகிறது.


உடலை வருத்தி அவர்கள் காவடி எடுப்பது எந்த வகையில் இந்து மதத்தை அர்த்தமற்றதாகுகிறது. atleast தனி மனித உரிமையில்லை தலையிடாமல் இருப்பமே? மனதை ஒறுத்தி இறைவனை நாடலாம் முடியாதவர்கள் உடலை ஒறுத்தி நாடுகிறாகள். விட்டுடுவமே? சரி ஆபிரிக்க பழங்குடியினர் வேட்டையாடி மாமிசம் உண்கிறார்கள். நாம் வேட்டயாடுவதில்லை ஆனால் உண்கிறோம். எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?

இறைவன் இவை அனைத்தையும் கேட்கவில்லை. மாறாது அன்பையும் தன்னை மறக்காத நெஞ்சையும் மட்டுமே கேட்கிறார். அதற்காக அந்த பக்தர்களையும் அந்த இறைவனையும் விமர்சிப்பது உண்மைக்கு தொலைவானது. உங்கள் பாஷயிலையே பேசினால் அந்த கணமாவது இறைவனை நினைகிறார்கள் இந்த கொடிய உலகில் என்று நிம்மதியாய் இருப்போம். நீங்கள் தானே உங்கள் முந்தய "இன்னும் இனி என்ன செய்ய போகிறோம்? " பதிவில் பொருளாதாரத்தை முனேற்றவும் மாற்றத்தை ஏற்கவும் கூறினீர்கள். இந்த சந்தர்பத்திலாவது இலங்கை government, எம்மக்களின் சக்தியை அறியட்டுமே. இந்து மதத்திற்கு அர்த்தமுண்டு. தெய்வம் நின்று கொல்லும் அண்ணா... காத்திருங்கள் நம்பிக்கையுடன்...

Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes