BREAKING NEWS

Like Us

Monday, May 18, 2009

நாற்பத்து ஆறு பில்லியன் பெறுமதியான கொலைச்செய்தி..கொழும்பு பங்குச்சந்தையில் அதிசயம்


இன்று உலக பங்குச்சந்தைகள் எல்லாம் ஏற்றங்களை காட்டி இருக்கின்றன . நுயோர்க் , லண்டன் ,டோகியோ பங்குச்சந்தைகள் எல்லாம் அதிகரிப்புகளை காட்டுவதன் பின்னணியில் உலக பொருளாதார மீட்சி என்ற காரணம் இருக்கிறது.

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் உயரிய பெறுமதியை அடைந்திருக்கிறது , அதற்கு காரணம் அங்கு காங்கிரஸ் தலைமையில் ஒரு பொருளியல் அறிஞரை பிரதமராக கொண்ட நிலையான ஒரு அரசாங்கம் அமைந்திருக்கிறது. இடது சாரிகள் ஆதரவோ , பிற்போக்கான கொள்கைகள் உடைய கட்சிகளில் தங்கி இருக்கின்ற அரசாங்கம் அமையாமை மிகப் பெரிய அந்த மாற்றத்துக்கு காரணம் . ஒரேநாளில் இரண்டாயிரத்து பத்து புள்ளிகள் அதிகரித்து பதின் நாலாயிரம் புள்ளிகளை தொட்டிருக்கிறது.

இவை எல்லாம் இப்படி இருக்க ஒரு தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு செய்திக்காக நாற்பத்து ஆறு பில்லியன் ரூபாய் மாற்றம் காட்டியிருக்கிறது கொழும்பு பங்குச் சந்தை. இன்று மட்டும் பதினோராயிரம் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. நாற்பத்து மூன்று மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு இருக்கின்றன. ஒன்று தசம் இரண்டு பில்லியன் ரூபாய்கள் மொத்த புரள்வாக பதிவாகி இருக்கிறது . இவை எல்லாம் கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்று சாதனைகள். இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மட்டுமே. வேறு எந்த பொருளாதார காரணியும் அல்ல. குறித்த நாளின் முடிவில் கொழும்பு பங்குச்சந்தை குறியீடுகள் பின்வருமாறு காணப்பட்டது.

ASI 2,030.90 123.23 6.46%
MPI 2,230.27 162.01 7.83%

The Colombo Stock Exchange (CSE) has 235 listed companies representing 20 business sectors. The market capitalization as at 31st March 2009 was 533.7 billion ருபீஸ். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் சகல கம்பனிகளினதும் மொத்த நிதிஈட்டத்தின் பெறுமதி அண்ணளவாக எட்டு சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. அதன்படி சகல கம்பனிகளினதும் பங்குகளின் பெறுமதி நாற்பது நான்கு தசம் ஆறு பில்லியனால் குறித்த நாளில் மட்டும் அதிகரித்தது எண்டு கொள்ளலாம். எனவே அந்த கொலைச் செய்தியின் மொத்த சந்தை பெறுமதி நாற்பத்து ஆறு பில்லியன் ரூபாய்கள் ஆகும். உலகிலேயே ஒரு கொலை செய்தியால் இவ்வளவு மற்றம் ஏற்படும் நாடு இலங்கையாக மட்டுமே இருக்க முடியும்.


"The main price indices of the Colombo Stock Exchange (CSE) recorded exceptional gains during trading today (18th May 2009). The All Share Price Index (ASPI) gained 123.2 points (6.5%) to close the day at 2,030.9 while the 25 stock Milanka Price Index (MPI) recorded an increase of 162.0 points (7.8%) during the day's trading to close at 2,230.2. This is the sixth highest daily percentage growth recorded by the ASPI in CSE history, surpassing 5.95% growth recorded by the index in November 2003. The MPI too reached record levels today by recording the fifth highest percentage growth in history. The turnover for the day reached Rs. 1.2 billion, with 43.1 million shares changing hands. A total of 11,539 trades took place today, the fourth highest ever number of trades to have been executed at the CSE, surpassing 11,369 trades executed in October 2007.The exceptional growth of the ASPI during the day brought the index growth for the current year up to 35.1%, while the MPI growth for the year to date stands at 36.7%. "

Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes