Wednesday, December 17, 2008
என்னை மீறிய எண்ணங்கள்
Posted by Sutha on 10:38:00 AM in Kavithai | Comments : 0
நான்
கடந்துவரும்
கல்லறைகளில் எல்லாம்
எத்தனையோ கதைகள்
புதைந்து
கிடக்கின்றன,
மரங்கள்
எல்லாம் என்னை
பார்த்து ஏதோதோ
கடந்தகால சம்பவங்களை
சொல்ல நினைப்பதாய்
எனக்குப்படுகிறது,
நடந்துவரும்
சாலைகளில் எல்லாம்
எழுதப்படாத எத்தனையோ
வரலாறுகள்
சிதிலமாகி
கிடக்கிறது,
உருவம் இல்லா
ஏதோ ஒரு பயம்,
என் மனதின் எங்கோ
ஒரு மூலையில்
விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே
இருக்கிறது.....
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment