BREAKING NEWS

Like Us

Tuesday, September 25, 2012

BARFI ! ..யும் சில எண்ணங்களும்

ஒவ்வொரு நாளுமே பார்ப்பேன், அந்த எழு வயது சிறுமியை.. ஆபிசுக்கு வெளியே உள்ள பெட்டிக்கடையில் சிகரட் பிடிக்க வருபவர்களிடம் இரந்து கொண்டு இருப்பாள், யாரும் கண்டு கொள்வதே இல்லை..

மெலிந்து போன சிறுவன், பிள்ளையார் வேஷம் போட்டிருந்தான், சிக்னலில் பிச்சை எடுத்துகொண்டு இருந்தான். விநாயகர் சதுர்த்தி காலம் இது, மும்பையில் விசேடமாக கொண்டாடப்படுகிறது. கடவுள்களும் பிச்சை எடுப்பது இந்தியாவில் மட்டும் தான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது..
தினமும் நான் ஏறும் ரிக்க்ஷா காரர்களின் முகத்தில் ஒரு சோகம் ஓட்டிக்கொண்டே இருக்கிறது, அவர்களுக்கு புரிந்த ஆங்கிலத்திலும், சைகை மொழியிலும் கேட்பேன், பெரும்பாலும் அவர்கள் பீகார், உத்தர பிரதேஷ் போன்ற வறுமைப்பட்ட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள். அவர்கள் சுமக்கின்ற களைப்பும் சோகமும் வார்த்தைகளில் வராதது .. பின்னிரவுகளிலும், தூக்கம் மறந்து, யாராவது வந்து ஏறமாட்டார்களா என எதிர்பார்த்திருக்கும் அவர்கள் ஒவ்வொருவரையும் நம்பி, ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடைகளில், உணவகங்களில் வேலை செய்பவர்கள் எல்லாம் இரவுகளில் ஆடு மாடுகளை போல வீதிகளில் தான் படுத்து உறங்குகிறார்கள்.

மும்பை என்ற கனவு தேசத்தில் வசிப்பவர்கள், சக  மனிதனை   மனிதனாகவே மதிப்பது இல்லை, மேலே சொன்ன கடை நிலை மனிதர்களை எல்லாம் ஒருமையில் தான் அழைக்கிறார்கள். மற்றவன் தொடர்பான அக்கறையோ, கரிசனையோ, அன்போ, நட்போ கிடையவே கிடையாது. நான் மட்டுமே வசதியாக வாழ்ந்தால் போதுமென்று நினைக்கிறார்கள், எண்ணற்ற மனித அடர்த்தியும் , போட்டியும் அவர்களை மாற்றிவிட்டிருக்கிறது..

(எஸ். ராமகிருஷ்ணன் கதைகளை தேடி தேடி படித்ததாலோ என்னவோ இந்த விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய அவதானிப்பு இருந்து கொண்டே இருக்குறது) இப்போது விகடனில் ஒரு எழுத்தாளர் அதே பாணியில் எழுதுகிறார்.    


எம்மிடம் இல்லாத ஒன்றையோ , கிடைக்காத ஒன்றையோ நாம் சேலேபரெட் பண்ணுவம், கொண்டாடுவம்.. அதனால் தானோ என்னவோ காதல் , அன்பு , இறக்கம் என்கிற அடிப்படை மனித குணங்களை நேர்மையாக காட்டும் படங்கள் இங்கு வெற்றி பெறுகுது. கிட்ட தட்ட அமெரிக்ககாரன் வேற்று கிரக வாசிகளையும், வினோதமான உயிரினங்களையும் திரைக்கு கொண்டு வருவதை போல.



பர்பி , அத்தனை அழகான படம், உணர்வுகள் குறைந்த சாதாரண மனிதர்களின் உலகம் தவிர்த்து.. மாற்று திறனாளிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

ஒரு சாதாரணமான முக்கோண காதல் கதை, சொல்லப்பட்ட விதத்தால் அழகு பெறுகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழர் ரவி வர்மன் (tp://en.wikipedia.org/wiki/Ravi_varman ) அத்தனை பிரேம்களிலும் அழகு. பல இடங்களில் மூன்றாம் பிறை டச் இருக்கிறது. எடுக்கப்பட்ட இடமும் அது போன்ற ஒரு இடம் தான்.


பிரியங்கா சோப்ரா தனித்து தெரிகிறார், என்ன ஒரு பக்குவப்பட்ட நடிப்பு, Fashion / BARFI .. போன்ற கதைகளை தெரிந்து நடிப்பதற்கே ஒரு தனி துணிவு வேண்டும். அது நிறையவே இருக்கிறது , இருபத்து எட்டு வயதிலும் இரண்டாம் வகுப்பு குழந்தையாய் நடிப்பதற்கு.. அண்மையில் PC வீடியோ பார்த்தேன்.. இதையும் பார்க்கவும்..

http://www.youtube.com/watch?v=NCIFymwreZ4&feature=related



ரன்பீர் cute ஆக இருக்கிறார்.. அனைவருக்குமே பிடித்திருக்கும் பர்பி என்ற பாத்திரம். .செமையாய் ஸ்கோர் பண்ணுகிறார்.. மூன்றாம் பிறை கமல்ஹசன், சார்லி சாப்ளின் , மிஸ்டர் பீன் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணினால் ஒரு Charecter வருமே அது தான் பர்பி. கேட்க பேச முடியாத பர்பி செய்யும் சேட்டைகள் காமெடி கலக்கல் .

கடந்த 6 வருடங்களில், இலியானாவின் இடுப்பு சைஸ் ஒரு இன்ச் கூட மாறவில்லையாம், நாம எல்லாம் இலியானட இடுப்பிலையே நிறைய மினக்கிட்டதால், வேற எதையும் பார்க்கல.. என்னமாய் expression காட்டுறார். இலியானவுக்காக இன்னொமொரு தடவை பார்க்கணும் போல இருக்கு பர்பியை.

எனக்கு என்னவோ ஆஸ்கார் கிடைக்கும் எண்டே தோணுது.. வெள்ளைகாரனை கவர நிறைய பிளஸ் இருக்கு இந்த படத்தில், அதிகம் வள வள டைலாக் இல்லாமல் expression ல படம் ஓடுவதால் .. எனக்கும் கூட விளங்கிச்சு பர்பி.. அவசியம் பார்க்கவும் . .

Wednesday, February 1, 2012

Wings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி

நாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருடங்கள் தடைப்பட்டிருந்து, தனது சிறிய தாயுடன் இருந்து கல்விகற்று வரும் அவளது வாழ்க்கை தேடல்கள் மிக சில தான்... சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்ததில் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல் எதோ ஏகாந்தமாய் தான் அவளது கல்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது.. வயதுக்கு ஏற்ற அறிவு முதிர்ச்சி கூட அவளிடம் குறைவு தான் , பதினான்கு வயதேயான அந்த சிறுமிக்கு தான் வாழ இருக்கும் எதிர்கால வாழ்க்கை தொடர்பான எந்த வித தெளிவும் இல்லவே இல்லை..



அந்தசிறுவன் சற்றே வித்தியாசமாக இருந்தான், குள்ளமான உருவம், எதோ ஒரு துடிப்பான நடவடிக்கைகள் அவனை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தி இருந்தது, விசாரித்து பார்த்ததில் அவன் தான் முதல் மாணவன், சராசரி எண்பதுக்கும் மேலே இருந்தது. அவனது தேடல்கள் விசாலமானது... அவனுடைய வேகத்த்துக்கு ஏற்ற வளங்கள் அந்த பாடசாலையில் இல்லை, எதோ சாதிக்க துடிக்கும் வேகமும் ஆளுமையும் அவனிடம் இருக்கிறது.. அனாலும் அவனது வசதி வாய்ப்புக்கள் அவனது வேகத்துக்கு இடம் கொடுக்கவில்லை....
 இது போன்று ஏராளமான மாணவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற அதிகமாக போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளார்கள், இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்கு வழிகாட்டுவதே, சமூக நோக்கான "Wings to Fly " எமது குழுவின் நோக்கம்.


 இதன் ஆரம்ப கட்டமாக கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கபட்டு பாரமுகமாய் இருக்கின்ற பாடசாலைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து அங்கு காணப்படும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பிரச்சனைகளை எங்களால் முடிந்தவரை உடல் உழைப்பாலும் கிடைக்கும் நிதி முதல்களாலும் தீர்வுசெய்ய முயற்சித்தோம்.


 ஏற்கனவே அந்த பாடசாலைக்கு சென்று, அதிபருடன் தொடர்பை ஏற்படுத்தி, கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு தரப்பினருடனும் தொடர்பில் ஈடுபட்டு பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தகவல்கள், கருத்துக்கள் மூலமாகவும் எமது மாதிரிச்செயல்திட்டத்தை கடந்த 20ம் திகதி செயல்படுத்தி இருந்தோம்.


 நாமும், எம் போன்ற எண்ணம் கொண்ட சிலரும் அளித்த நிதி உதவியுடன் , ஏழு பேர் அடங்கிய சிறிய குழுவினர்  கற்றல், விளையாட்டு உபகரண பொதிகளுடன் குறித்த பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்தோம்.


எமது பிரதான இலக்கானது, குறித்த பாடசாலைக்கு நீண்ட காலத்துக்கு ( குறைந்தது இரண்டு வருடம்) தேவையான உதவிகளை செய்து, அந்த மாணவர்களின் கற்றல் இணை பட விதான செயற்பாடுகளை அதிகரிப்பதாகும்...

எமது முதற்கட்ட செயற்திட்டம் பின்வரும் இலக்குகளை கொண்டது,
  • குறித்த பாடசாலை நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கும் எமக்கும்மிடையிலான நம்பிக்கையை கட்டிஎளுப்புதல்.
  • மாணவர்களுக்கு எமது செயல்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.எம்மால் வடிவமைக்கப்பட்ட எதிர்கால செயல்திட்டங்களுடன் மாணவர்களது தேவைகள் எதிர்பார்ப்புக்களை பொருத்திப்பார்த்தல்.
  • ஆசிரியர்களின் எண்ணங்கள், கருத்துக்கள், எதிர்பார்ப்புக்களை தெரிந்துகொள்ளல்
  • மாணவர்களின் கற்றல் இணை பட விதான செயற்பாடுகளை அதிகரிப்பதாகான செயத்திட்டன்களை (Career Guidance/ Coounselling) நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
மேலும் குறித்த நன்கொடை பொருட்களை மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு கையளித்ததுடன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனுமான கலந்துரையாடல்கள் மூலம் பல விடயங்களை கேட்டறிந்துகொண்டோம். ஆசிரியர்களின் அபரிமிதமான ஊக்கமும் ஆதரவும் எமக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. சிறு சிறு அணிகளாக பிரிந்து பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பேசி அவர்களிடம் கனவுகளை விதைத்தோம்.

  
நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது எதிர்கால செயல்திட்டங்களை வடிவமைக்கவுள்ளதுடன் சில உடனடித்தேவைகளுடன் அப்பாடசாலை எம்மை நாடி நிற்பதனால் எம் அங்கத்தவர்கள் அனைவரின் பங்களிப்புடனும் வெகு விரைவில் அடுத்த செயல்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அது தொடர்பான விபரங்கள் வெகு விரைவில் எமது தளத்தில் பதியவுள்ளோம்.

  
உங்களாலும் எங்கள் முயற்சிக்கு சிறிய அளவிலான பங்களிப்பை வழங்க முடியுமாயின், Wings to Fly என்ற எமது facebook குழுவில் இணைந்து கொண்டு எமது செயற்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
இது ஒரு சமூக அக்கறை நோக்கான குழுமம் . அரசியல், மொழி, இனம் சாராததாக எமது நடவடிக்கைகளும் பிரதிபலிப்புக்களும் இருக்கட்டும்.


ஒவ்வொரு செயல்த்திட்டங்களையும் ஒவ்வொரு சிறகுகளாய் கொடுத்து மாணவர்களை கல்வி வானில் சிறகடிக்கச்செய்வோமாக..
Wings To Fly...
 You were born with potential
 You were born with goodness and trust
 You were born with ideas & Dreams
 You were born with greatness
 You were born with wings
 Learn to use them to fly..

                                    - Jalaluddin Rumi
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes