BREAKING NEWS

Like Us

Saturday, June 25, 2011

நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)

சித்தார்த்த பார்த்து எத்தனை வருசமாச்சு, கடைசியா ஆயுத எழுத்துல பார்த்தது, ரெண்டே படம் தான் தமிழ்ல நடிச்சிருந்தாலும், இரண்டுமே மனசுல நிக்குது. ஜெனிலியாவுக்காக எகிறி குத்திச்சும்  , திரிசாவுக்காக நெஞ்சம் எல்லாம் காதல் சுமந்ததால.. அந்தகால ஜெமினி கணேஷன் மாதிரி ஒரு காதல் ஹீரோவா  ஒரு ரவுண்டு வருவார் எண்டு பார்த்தா,  காணாமலே போய்,  எட்டு வருஷம் கழிச்சு திரும்ப வந்திருக்கார்,  எண்டதால சும்மா ஒருக்கா போய் பார்த்த படம் தான் நூற்றிஎண்பது.


 
யாரோ சொன்னார்கள், இந்தியாவில் சினிமா பார்ப்பது சூப்பராய் இருக்குமென்று, சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு சென்றபோது சததியமில் யுத்தம் செய் பார்த்தோம். அட்டகாசமாய் இருந்தது, மிக பிரமாண்டமாய்  இருந்தது சத்யம் திரையரங்கு. அப்போது காட்டினார்கள் சத்யம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று. அவர்கள் எடுக்கும் படமும் பிரமாண்டமாய் இருக்கும் , பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.


கதை, மிகச் சாதரணமான ஒரு முக்கோண காதல் தான். அதை சிறப்பான படத்தொகுப்பு மூலமும், அழகான இரண்டு கதா நாயகிகள் மூலமும் தாங்கி பிடித்திருக்கிறார்கள்.


பழைய  கண்ணதாசன் பாடல் ஒன்றில் இப்படி ஒரு வரி வரும்..

"கண்கள் தீட்டும் காதல் என்பது, கண்ணில் நீரை வரவழைப்பது..  
பெண்கள் காட்டும் அன்பு என்பது, நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது."
அப்படி இரண்டு பெண்களின் அன்பில்  மாட்டிக்கொண்ட சிர்த்தார்தின் நிலை தான் இந்த படத்தின் ஒன்லைன்.

அழகாக வர்ணிககப்படும் கதாபாத்திரங்கள், அன்பான வெளிப்படுத்தல்கள்..போலித்தனம் இல்லாத சம்பவங்கள் ,  நீண்ட காலத்துக்கு பிறகு பார்த்தா சண்டையே இல்லாத  படம் என்பது போன்ற சில பல காரணங்கள்,  எனக்கு படம் பிடித்திருக்க போதுமானதாக இருந்தது..

ஆனால் எனக்கு முன் வரிசையில்  இருந்த ஒரு பெரிய செட் , அந்த படத்துக்கு போகலாம் என்று கூட்டி வந்த நண்பனை கேட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு இருந்தார்கள். ஒரு வேளை அஜித் , விஜய் படம் பார்த்து பழகியவர்களோ என்று நினைத்துக்கொண்டேன்.

மனசில பட்டத்தை அழகுணர்ச்சியோடு செய்யும் ஹீரோ, போடோ கிராபர் ஆன ஒரு ஹீரோயின், அன்பை மட்டுமே காட்டும் இன்னொரு ஹீரோயின் என்று ரசிப்பதற்கு விடயங்கள் இருக்கிறது.
இந்த படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம், பின்னணி குரல்,  சில நடிகர்களின் குரலில் எதோ அழுத்தம் இருக்கும், சிர்தார்தின் குரலிலும் எதோ ஒரு attactive factor இருக்குது.  நித்யா மேனன் குறும்பாய் , அழகாய் இருக்கிறார். .. அவருக்கு பின்னணி குரல் கொடுத்ததும் , ஆயுத எழுத்தில் Isha deol  கு குரல் கொடுத்ததும் ஒருவராய் இருக்க வேண்டும்..அப்படி ஒரு அழகான பேச்சு. 


ப்ரியா ஆனந்த்.. நன்றாகவே நடிப்பு வருகிறது, நிறையவே "Glamour" ஆகவும் இருப்பதால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்றே நினைக்கிறேன். . ஹீரோயின்கள் தொடர்பான என் எதிர்வு  கூறல்கள் பல நேரங்களில் சரியாகவே இருந்திருக்கிறது. 
மதராச பட்டணத்தில் நடித்த எமி ஜாக்சன் பொண்ணு, ஒரு ரவுண்டு வரும் எண்டு சொன்னேன், விண்ணை தாண்டி வருவையா ஹிந்தியில் திரிஷா நடித்த ரோலில்  அந்த பொண்ணு நடிப்பதாக கேள்வி.  (கிளிக் to Read )
பல விளம்பரங்களில் வரும் திவ்யா பரமேஷ்வர் என்ற பொண்ணு அழகா இருக்குதே எண்டு எண்ட ப்லொக்கில் புலம்பி இருந்தேன். அதை பார்த்து யாரோ பொன்னர் சங்கரில் ஹீரோயின் ஆக்கி இருந்தனர். .. (கிளிக் to Read )
அடுத்து படத்தில், இசையும் பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவுமில்லை. பின்னணி இசை ஓரளவு ரசிக்கும் படியாக இருந்தது.  மற்றும் படத்தில் சித்தார்த்,   ப்ரியா ஆனந்த் அணியும் "costume"   அழகு. நிறையவே மினேக்கேட்டு Rich ஆக காட்டி இருந்தார்கள்.


மொத்தத்தில் தொய்வான கதை, தூக்கல் இல்லாத இசை என்று சில குறை பாடுகள் இருந்தாலும் ... பொழுது போக, சந்தோசமாய்  பார்க்க கூடிய படம் இந்த நூற்றிஎண்பது.   



பிற சினிமா பதிவுகள்


Monday, June 6, 2011

மது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்

மிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக  விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி சற்றே நேர்த்தியற்றதாக  இருந்தாலும்,  பின்னர் நடந்த நிகழ்ச்சிகள்  சிறப்பாக  இருந்தது. 
பல்கலைக்கழக விழாக்களும் " கோம்மேர்சியல்" நோக்கத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே என் கருத்து. அந்த வகையில் இந்த விழா அந்த நோக்கத்தை சற்றே எட்டியிருக்கிறது என்பது தொடர்பான மகிழ்ச்சி .     

இன்றைய தேதியில், ஒரு விழாவுக்கு வருகின்ற ரசிகனை, முழு நேரமும் நிகழ்ச்சிகளிநூடக திருப்பதிப்படுத்த வேண்டிய தேவை கட்டாயமானது. இல்லாவிட்டால் கடந்த சில கழக விழாக்களை போல தொடர்புடைய மாணவர்கள் தவிர எவரும் இது போன்ற  நிகழ்சிகளை பொறுமையுடன் பார்க்க வரமாட்டார்கள்.

கடந்த காலத்தில்,  இது போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு முன் நின்று உழைத்தவன் என்கிற அனுபவத்தில்,  இம் முறை நிகழ்விலும் சில விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம், 
  1. சில பல சிற்றுரைகள் (சிறப்பு அதிதி, உப வேந்தர் போன்றவர்களின்)
  2. நிகழ்ச்சிகளுக்கிடையே நீண்ட இடைவெளிகள்  
  3. ரசிகர்களின் கவனத்தை சற்றும் ஈர்க்காத வாத்திய கருவி / வாய்ப்பாட்டு நிகழ்சிகள் ( அப்படி ஒரு நிகழ்ச்சி இம்முறை   நடை பெற்றது, அதை கொஞ்சம் "fution" போல் நடாத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கம். 
  4. பார்க்க வந்த கூட்டத்துக்கான சிற்றுண்டி தேவையே இல்லாத ஒன்று/ வீண் செலவு
  5. புத்தக வெளியீடுகள் / பரிசளிப்பு விழாக்கள்/ கெளரவிப்புகள் (நிகழ்சிகளின் தொடக்கத்திலே வைத்து விடலாம்) 5 .30 தொடக்கம் 7 .30  வரையான பீக் ஹவரில் கூடவே கூடாது.
இம் முறை நிறைவை தந்த சில விடயங்கள்

  1. இளைய சமூகத்தை கவரக்கூடிய சிறப்பு விருந்தினர். ( பா. விஜய் காகத்தான் கூட்டம் கடைசி வரை இருந்தது, கவிதை மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டது மேலுமொரு போனஸ்.
  2. பொறுமையை சோதிக்கும் அனிமேசன்கள் இல்லாமை  ( வழமையாக UCSC  தான் இந்த கொடுமையை செய்யும் )
  3. நிகழ்வுகளை பெரிதாக காட்டிய LED  ஸ்க்ரீன் . பெரும்பாலனவர்கள் இதை தான் பார்த்தார்கள் .
  4. ஒரே வகையான நிகழ்ச்சிகளை தவிர்த்தமை ( வழமையாக எல்லோருமே நாடகம் தான் போடுவார்கள் )
  5. அதிகம் அறுக்காத நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் 
கவியரங்கம் அருமை, Chreshan நின் காதல் கவிதைகளை பிளாக்கில் வாசித்ததுண்டு, அப்படி ஒரு அழகுணர்ச்சி, வாசிக்கும் பொது எழுதவேண்டும் போல் இருக்கிறது எனக்கும்.  கவிதைகளிலான பதிவொன்று  எழுத நீண்ட நாளாய் ஆசை ஆனாலும் எதோ தடுமாற்றம். Chreshan நின் கவிதை  கேட்க இறுதிவரை காத்து இருந்தேன், ஆனால் Chreshan னுக்கு காதல் மறந்து  வீரம் வந்ததில் ஏமாற்றமே.  நடுவில் வந்த கிராமிய நடனம் அருமை , பாடல்களின் தெரிவும்  கோர்த்த விதமுமே அதன் success.

இனி விசயத்துக்கு வருவோம், நான் இந்த நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என்று நிறைய நாளாவே காத்திருந்தேன். காரணம் எங்கள் பாசத்துக்குரிய தம்பி, எழுச்சி நாயகன்,  இயக்குனர்  மது சங்கர் குறும்படம் எடுக்கிற செய்தி நிறைய நாட்களுக்கு முன்னதாகவே கசிந்திருந்தது.

மதுவிட்ட  ஒரு பெரிய கலை ஆர்வம் இருக்கு என்றது தெரியும், ஆனா Assistant Director எல்லாம் வச்சு  குறும்படம் எடுக்கிற அளவுக்கு பெரிய இயக்குனராக மது வருவான் எண்டு நான் எதிர் பார்க்கல.

மது சங்கர் கம்பஸ்  வந்த ஆரம்ப காலங்கள் இன்னும் நினைவில நிக்குது.  அந்த காலத்து மது தியாகராய பாகவதர் மாதிரி முடி வளர்த்திருந்தான்.  அந்த பாழாய் போன தலை முடியை ஆட்டி ஆட்டி மது டயலாக் பேசும் போது  பொம்புளை புள்ளைகள் எல்லாம் எழும்பி நிண்டு கை தட்டுங்கள் . 

ஒருவேளை தண்ட அழகில மயங்கித்தான் அவங்க  "cheer" பண்ணுறாங்கள் எண்டு தப்பா  நினைத்து,  மது சங்கர் இயக்குனர் ஆகாமல் ஹீரோ ஆகிடுவானோ எண்டு கூட நாங்க பயந்தம். ஆனா அவன் சரியான பாதையை தேர்ந்தெடுத்து இன்றைக்கு பெரிய இயக்குனாராகி இருப்பது எங்களுக்கு பெரிய சந்தோசம் , ஏன் எண்டால் நாங்க மது சங்கர் எல்லாம் ஒரே கூத்துப் பட்டறையில் வளர்ந்தவர்கள்.   


சில வருடங்களுக்கு முன்னர் எண்ட வீட்ட வந்த மது , " திரைக்கதை எழுதுவது எப்படி" என்ற சுஜாதாவின் புத்தகத்தை தூக்கி கொண்டு போய்ட்டான் . இன்னும் கொண்டு வந்து தரவில்லை என்பது உபரி தகவல்.  அவன்ட குறும்படத்தில் வைத்த "twist" களும் "symbols" களும் அந்த புத்தகத்தை அவன் பிரித்து மெய்ந்திருக்கிறான் என்பதற்கான சாட்சி.  இந்தளவு "refer" பண்ணி குறும்  படம்  எடுத்த  மது   கவுதம் மேனன் போல கொஞ்சம்  இமிட்டேட் பண்ணினது சங்கடமாய் இருந்தது. ஆனாலும் குறும் படங்களுக்கு " Voice Over" தவிர்க்க முடியாதது  நியாயமே.


எங்க டிரோஷன், தமிழ் ராஜன்  மாதிரி ஆக்களும் நடிக்கிறதில, ஓவர் Act பண்ணி படத்த கெடுத்துடுவான்களோ எண்டு நான் பயன்திருந்தனான் . டிரோஷன்  ஐம்பது ரூவாக்கு நடிக்க சொன்னா ஐயாயிரம் ரூபாவுக்கு நடிக்கிரவன். நல்ல  வேளை மேடை நாடகத்துக்கு மட்டும் தான் கொஞ்சம் ஓவர் அக்டிங் தேவை என்பதை புரிஞ்சு அளவா தரமா குடுத்திருந்தாங்க.

 ஹீரோவா ரொஷான  செலக்ட் பண்ணிய இடத்திலிருந்தே மதுட வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அங்க தான் இயக்குனரா உயர்ந்து நிக்கிறான் மது.  எனக்கு கம்பஸ்ல  ஏறக்குறைய எங்கட  ஆக்கள்   எல்லோரையும் தெரியும், ஆன இப்படி "close up" காட்சிகளுக்கு   பொருத்தமா charm ஆன  ஹீரோ quality யோட  ரொஷான தவிர  வேற யாரையும் யோசிக்க முடியல.  ஒரு வேளை "Jesh" பொருந்தலாம். நல்ல வேளை டிரோஷன ஹீரோவா போடததால LED Screen உடையாம தப்பிருச்சு.


அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான  நடிப்பு ரோஷனுடையது. அனாலும் குரலில் கொஞ்சம் தெளிவின்மை இருந்தது. பத்து நிமிடமே ஓடும் படத்தில் மற்றைய காதாபாத்திரங்கள் வந்து போகின்றவை தான். அனாலும் டிரோஷன் , தமிழ் ராஜன்,   கலை பிரியா , கலை வாணி ஆகியோருடைய நடிப்பு குறிப்பிடும் படியாக இருந்தது.   வயதான பாத்திரங்களில் "Make -Up" இல் கொஞ்சம் மினக்கிட்டு இருக்கலாம். அந்த விடயத்தில் எந்த கதாபாத்திரமும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.

கேமரா அங்கிளில் பின்வரும் இடங்களில் கொஞ்சம் இடிக்கிறது, 
  1. ஹீரோ அறிமுகமாகும் இடம்.
  2. ஒரே அங்கிளில் இரண்டு நிமிடம் ஓடும் தண்ணி அடிக்கும் காட்சி
  3. twist வைத்த இடத்தில் ஓவராய் "zoom" ஆகும் கமெரா
  4. பக்கவாட்டில் காட்டும் நிறைய இடங்கள்  

அனுபவம் இன்மை தெரிகிறது. ஆனலும்  தனித்த முயற்சி எதிர் பார்த்ததை விட நன்றாக இருக்கிறது.  
டிரோஷனுக்கும், ஹீரோயினுக்கும் (?) இன்னும் கொஞ்சம் "close up" காட்சிகள் வைத்திருக்கலாம்.  தெரிந்தெடுத்த "location"    கள் குளுமையே.   


செல் போன் சிணுங்கல்களுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு. வெற்றுப் போத்தல் உருளுதல், ரோஜாப்பூவை "Zoom" செய்து தொடக்கி, கேமரா விரிகையில் நகரும்/தெளியும்   கதை முடிச்சு  , தேவையான இடங்களில் வரும் "Fade effect"   " repeated seens" தரமான படத்தொகுப்பினை காட்டி நிற்கிறது.  தனித்தே தெரிகிறது " எடிட்டிங் , டப்பிங் போன்றவற்றின் நேர்த்தி.


 மதுவின் அந்த கன்னி முயற்சியை நிறையவே  பாராட்ட வேண்டும் , படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது மது சங்கரை பார்த்தேன்.  பதட்டத்துடன் நின்று பாத்துக்கொண்டு நின்றான் . அதில் ஒரு ஏக்கம் தெரிந்தது ,  அரங்கு நிறைந்த மக்கள் இருந்து அவன் படத்தை பார்ப்பது   நிறைவை தந்திருக்கும் என்று நினைக்கிறேன்,

அண்மையில் நடந்த கலை விழா நினைவுக்கு வந்தது. 
மது சங்கர்   நாடகம் போட்டான்.  அவனது நாடகம் மேடை ஏறும் நேரம் தாமதமாகி கொண்டே வந்தது. குட்டி போட்ட பூனை அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான்.  அவன் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது.  மது,  பரிசு பெறும் ஸ்கூல் பிள்ளைகளை பிடிச்சு வச்சிருக்கம், உன்ட நாடகத்தை   பார்க்க அவன்களாச்சு இருப்பாங்கள் மச்சான் எண்டு யாரோ அறுதல் சொன்னார்கள். அதையும் நகைச்சுவையாகவே  எடுத்துகொண்டான்.

அவனது நாடகம் மேடை ஏறியபோது எட்டு மணி தாண்டி இருந்தது, எண்ணி ஒரு நூறு பேரே ஹாலில் இருந்தனர்.  அண்டைக்கு வலிச்சிருக்கும்  அவனுக்கு, ஆனா  வலி தாங்கிற உள்ளத்தால தானே ஜெயிக்கவும் முடியும்.       


 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes