BREAKING NEWS

Like Us

Wednesday, April 6, 2011

ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 2

மதுரை நோக்கி போகிறேன்... தொடரும்...என்று முடித்திருந்தேன் கடந்த பதிவை, ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு மூன்று மணி நேரத்தில் மதுரை வருகிறது, டிரைவர் பெரியசாமி இளையராஜா பாடல்களை ஓடவிட்டது இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளமான எமது தமிழ் நாட்டு பயணம் இளையராஜாவின்  காதல், சோக  பாடல்களுடனேயே கடந்துபோனது ஒரு சுகனுபவம் . ( டிரைவர் பெரியசாமி பற்றியும் அந்த பாடல்களுக்கு பின்னால் இருக்கிற அவனின் காதல் கதை பற்றியும்  அடுத்த அடுத்த  பதிவுகளில் பார்ப்போம்.)



மதுரை எதோ பிடித்திருந்தது, அழகு என்று இல்லாவிட்டாலும், பரபரப்பான நகரம், சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தது.  தமிழகத்தின் கலாச்சார நகரம், தூங்கா நகரம் எண்டு சொன்னார்கள் , இரவு பதினோரு மணி அளவில் வீதிக்கு வந்து பார்த்தேன் , உண்மை தான். இந்தியாவில் படம் பார்ப்பது நல்ல ஒரு அனுபவம் , அது பார்த்தால் தான் புரியும் , சூப்பராய் இருக்கும் என்று யாரோ சொல்லி இருந்தார்கள் , மதுரையில் தூங்கா நகரம் பார்க்க வேண்டும் என்று நானும் டிரோஷனும் பிளான் போட்டோம் , ஆனால் முடியாமல் போய்விட்டது. பின் சத்தியமில் "யுத்தம் செய்" பார்த்த கதை பெரிய சாமியின் கதையோடு அடுத்த எபிசோட்டில் வருகிறது.  

மீனாட்சி அம்மன் கோவில் போனோம் , கலை மற்றும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்ந்து நிற்கிறது கோயில். அம்மனை தரிசிக்க வரிசையில் நின்ற பொது , ஒரு வயசான பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன். . மதுரை பக்கம் ஊராம் , விவசாயம் பார்ப்பவராம்.. நான் சிலோனில் இருந்து வந்திருப்பதாக அவர் கேட்டு நான் சொன்னேன், பஸ்லையா வந்தீக எண்டு கேட்டார்,

முன்னதாக பாம்பன் பாலத்தில், அன்னாசி விற்பவனை பேட்டி கண்டோம், அவன் படித்திருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் அவன் மண்டபம் அகதிகள் பிரச்சனை , இலங்கை இராணுவம் மீனவர்களை தாக்குவதன் பின்னணி என்பதெல்லாம் பற்றி NDTV  பர்கா தத்தை விட அதிகமான தகவல்களை வழங்கினான். எனவே அறிவு என்பது கற்பதில் இல்லை தேடலில் தான் இருக்கிறது. 

மதுரையில் இருந்து அருகில் தான் இருக்கிறது, திருப்பெரும் குன்றம், அழகு முருகன் காட்சி கொடுத்த ஆறு படை  வீடுகளில் ஒன்று. அங்கு பார்த்த ஒரு நபர் நினைவுகளில் நிற்கிறார். நவக்கிரகங்களுக்கு அருகாமையில் கதிரை போட்டு அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நிமிடத்திலும் இரண்டு தடவைகள் "  நவக்கிரகங்களுக்கு நெய்  விளக்கு  எரியுங்க சார்" என்று  சொல்லிக்கொண்டே  இருந்தார். கொஞ்சம் மனப்பிறழ்வு அடைந்திருக்க வேண்டும், அவரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அனால் குரல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. நாள் முழுவதும் அப்படியே சொல்லிக்கொண்டு இருப்பார் போலும்,

அவரை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது, தமிழ் நாட்டில் , என் இங்கும் கூட கோயில், கோயில் சார்ந்ததாக விரயமாகும் உழைப்பு , நேரம் அளவில் இல்லாதது. தேசிய கணிப்பீட்டில் வராமலே எத்தனை  ஆயிரம் பேரின் உழைப்பு வீணாவதாலே,  இந்தியாவின் இலக்கு இரண்டாயிரத்து இருபது வரை நீளமாக இருக்கிறது. 

நாங்கள் அடுத்து போவது கொடைக்கானலுக்கு, எங்க டிரைவர் பெரியசாமிக்கு மதுரையே நாங்க காட்டி தான் தெரியும். இருபது வயதே ஆன அனுபவமில்லாத அவனோட மலை வழிப்பயணம் பயமாய் தான் இருந்தது. இந்தியா போகும் யாரும் முதலில் ஒரு map வாங்கினால், சரியாக திட்டமிடலாம், மதுரையில் இருந்து குறுக்கு பாதையில் வத்தலகுண்டு போனோம், டிரோஷனுக்கும் map அத்துபடியாகி போனது, இது தான் நாங்கள் கடக்கும் பாலம், இரயில் கடவை என்று மப்பில் காட்டினான்.

கொடைக்கானல் மலைகளின் இராணி , அங்கு இருக்கிற எல்லா tourist spot  களும்  பார்த்தோம். . பல படங்களில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தது. குணா பாறை கமல்ஹசனால் tourist spot ஆக மாறி இருந்தது. 

அங்கு ஒரு மலை உச்சியில்  ஐநூறு வருடங்கள் பழமையான பிரெஞ்சு தேவாலயம் , அழகாய் இருந்தது, அதற்கு கீழே ஒரு வயோதிபர் தேநீர் வித்துக்கொண்டு  இருந்தார். 
அப்படி ஒரு தேநீர் குடிக்கவே இன்னொரு முறை இந்தியா போகவேண்டும்..

♫♪♫ வாழ்வான  வாழ்வெனக்கு வந்ததென  நானிருந்தேன்  .. .♫♪♫...... ஓடிக்கொண்டு இருக்கிறது இளையராஜா பாடல்,  கேட்டுக்கொண்டே  வானுயர்ந்த சோலை வழி இறங்கி திருச்சி போகிறேன் . 

தொடரும்.... 

Share this:

rajan said...

I am a tamil from tamil nadu. I wish one day i could do a sri lanka visit especially jaffna , trincomalee and batticoloa similiar to your visit to india.

Meanwhile how different srilanka different from tamil nadu especially tamil speaking areas in terms of culture. Because I always felt srilanka as an extension of south india, the link cut by the rising sea thousands of years ago.

Kandumany Veluppillai Rudra said...

பரவாயில்லை இரண்டுபேருமே எங்கு போவதென்றாலும்,நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes