BREAKING NEWS

Like Us

Saturday, January 31, 2009

நான், நீ, ஒரு முரண்பாட்டு முயற்சி ....



இன்பமாகவே
ஒரு
கனவு
எனக்கான உலகத்தில்
நீ மட்டும்
தேவதையாக






நிஜத்திலும்
கூட
உன்னைத் தவிர
வேறேதும்
அழகாய்
பூமியில் இருப்பதாய்
புலப்படவில்லை




என்
கண்கள்
உன்னையே சுற்றிவர
இதைத் தவிர
காரணம்
எனக்கில்லை.

உனக்கும்
எனக்குமானது
இனம், மொழி தாண்டிய
முரண்பாட்டு முயற்சி
எனினும்...கண்கள்
பகுத்தறிவின் கட்டளைக்கு
பணிவதில்லை
சில நேரங்களில்...

ஒருவேளை
எனக்கு நீ
உரித்தானால்
எந்த மொழியில்
பேசிக்கொள்வது
என்று கூட
என் மனதில்
உனதான
நினைவோடங்கள்.














வா
சித்தார்த்தன் சிலையே
நான் நீ
போன்ற
முரண்பாட்டு
முயற்சிகளாவது
இந்த பிரேத
பூமியில்
சுடலைகள்
விஸ்தரிக்கப்படுவதை
கொஞ்சமாவது தடுக்கட்டும்.

Friday, January 30, 2009

எதற்காக நீ அழுகின்றாய்?


உன்னுடைய எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.




இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

Saturday, January 24, 2009

OBAMA: Another left handed to rule the world

Is it a just a weird coincidence that six of the last 14 American presidents have been left-handed? And now add president Barack Obama to make it 7 out of the last 15. This is a very interesting statistic considering that approximately 10% of the total population is lefthanded.Have you heard of the old adage "lefties are the only ones in their right minds"? So is there something to it? Are there significant personality trait differences between righties and lefties?

Here are some interesting facts:If you're left-handed, your personality traits may include resiliency & independence. Here are a few fascinating facts about left-handed people.First, Some Left-Handed Statistics About 10% of the world’s population is left-handed. There is a genetic component that determines right versus left-hand dominance, and it’s called the LRRTM1 gene. People with this gene are more likely to be lefties.The speech centers of right-handers and most left-handers are in the left brain. The left brain focuses on syntax and order, while the right brain monitors context and emotions.Some of us are “mixed-handed” people, which means both hands are used equally.


Psychological Characteristics of Left-handed PeopleLeadership. About 66% of American presidents in the last 30 years were left-handed men. Bill Clinton, George H.W. Bush, Ronald Reagan, and Gerald Fold were all left-handed presidents. Barack Obama and John McCain are both left-handed.Quick thinkers. Studies have shown that lefties are “exceptional.” (wikipedia)


Australian research shows that left-handed people think more quickly when playing computer games or sports. Left-handed people also tend to earn more money.Sexuality. Research from Canada reveals this interesting quality of left-handed people: they’re more likely to be homosexual.Mixed-handed people are more likely to alter their beliefs as they get new information, making them better able to see both sides of the story.


Personality Traits of LeftiesIndependence: Some experts believe left-handed people are more independent because they’ve had to get along in a world that’s not made for them. Dr Peters says that lefties are “slightly more resistant to social pressures, to have more of an independent streak.”Adaptability: Canadian research shows that left-handed people are more adaptable than right-handed people. That is, a lefty can use her right hand to do tasks much easier than a righty can use his hand. Left-handed people seem to be able to switch over more easily.Generally, Southpaws are thought to be more flexible, highly intelligent, and more resilient than right-handed people.So there you have it! The quick thinking, adaptable southpaws hold the world in their LEFT hand.(washington observer)

Friday, January 23, 2009

Slumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி

இந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ.ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றியும் , அவர் இசை அமைத்த Slumdog millionire பற்றியுமான அதிகபடியான தேடல்கள். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் படம், குறைந்தது 8 விருதுகளையாவது அள்ளிவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த அளவு தரத்துடன் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது உள்பட நான்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.

அமைதியாக வந்த அந்த படம் எ.ஆர். ரஹுமான் ஆல் ஏக எதிர்பார்ப்புக்களை உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கிறது. அது அவருக்கு மட்டுமேயான தனித்துவமான திறமையால் சாத்தியமாகி இருக்கிறது , அவரின் திறமையை குறைத்துக் கூறுவது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்த படம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளையும் , அது தொடர்பாக என் கேள்விகளையும் பதிவு செய்வதே எனது நோக்கம்.



என் பார்வையில் , இந்த படம் இந்தியாவின் , அதன் மக்களின் மிக அசிங்கமான ஒரு மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்தியர்கள் மட்டும் பார்த்து , தெரிந்து, மறைத்து வந்த பல விடயங்கள் இந்த படம் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு வரப்போகிறது.

நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன் , ஒரு உபகண்டமாக , உலகின் அடுத்த வல்லரசு எண்டு சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது. மிக திறமையான இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்குதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவரின் அதீத திறமைக்கு ஒரு சான்று.


இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதி இன்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், இன ரீதியான சண்டைகள் , வேட்டுகுத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம் , அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டுவது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. இதன் காரணமாகவோ என்னவோ படத்தொகுப்பாளர் , இந்தியரான ரெசுல் பூக்குட்டி என்பவரது பெயரும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை கவ்ரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அறிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.









முதல் சந்தேகம் , எ.ஆர். ரஹுமான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்பட இல்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?


படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கத பாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்பட இல்லை. ஹீரோவை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் நெகடிவ் ஆக இருப்பதற்கு காரணம் என்ன ...? அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அணில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும். சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொரூரம்? இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனர் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திராந்கலிநூடாக தான் கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுகிறார். அந்த காட்சிகள் கூட இந்திய போலீஸ் காரரின் கேவலத்தை நன்கு பறைசாற்றுகிறார் இயக்குனர். இப்படியான காட்சி அமைப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு கட்டாயம் தேவை தானா?


அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள், மற்றைய நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள் ?

இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார் படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?
வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்றைய இந்திய நகரங்கள் பற்றி ? இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழுகிறது .

ஆனாலும் இயக்குனர் பொய்யான ஒன்றை கட்டவில்லை, நிஜமான பல விடயங்களையே கட்ட்சிப்படுத்தியிருக்கிறார். நாம் சென்று அமெரிக்க போன்ற நாடுகளின் மக்களையும் , மனிதர்களையும் கேவலமாக பிரதிபலித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா ? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?

இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் ஒன்றுக்கும் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய எதாதிபதியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். எனவே விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலிய படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெற்றிருக்கிறது. இனிமேல் கமல் ஹசன் போன்றோரும் இந்தியாவை விமர்சித்து படம் நடித்தால் ஆஸ்கார் விருதுகள் வெகு தொலைவில் இருக்காது.

Monday, January 19, 2009

Advertisement



Saturday, January 17, 2009

beautiful photos....1


























































Wednesday, January 14, 2009

தமிழர்களே:தமிழர்களே: நீங்கள் கடலில் மூழ்கி அழிந்தாலும் நான் கண்டுகொள்ளேன்.....


"தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாக தான் மிதப்பேன் ...அதி நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் , கவிழ்ந்து விட மாட்டேன்".

இது இந்தியாவில் ஓட்டு மொத்த தமிழர்களுக்கும் தெரிந்த வாசகம் தான். கேட்கவும் பார்க்கவும் நன்றாக தான் இருக்கிறது. கடந்த பல மாதங்களாக பார்த்தும் கேட்டும் வருகின்றோம் . ஆனால் இப்போது பார்க்கும் பொது அதிகம் எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கிறது. இது போன்ற தனி மனித வீர பிரதாபங்களை எப்படி தான் தமிழக மக்களால் ரசிக்க முடிகிறதோ தெரியவில்லை. அன்று தொடக்கம் இன்று வரை , அன்றைய நடிகனில் இருந்து இன்றைய விஜைய் வரை இது போன்ற சுயவிலாசங்கள் சர்வ சாதாரணம். வேறு நாடுகளில் இப்படி படங்களிலும் அரசியலிலும் இது போன்ற வசனங்கள் வருவதில்லை. எப்படி தமிழக மக்களால் மட்டும் முடிகிறது என்று யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்.
சரி விடயத்துக்கு வருவோம் , இப்படி பல வாக்குருதிகளாலும் , வீர பிரதாபங்களாலும் தான் எழு கோடி மக்களின் தலைவன் எண்டு கூறும் அந்த நபர் ஜெயலலிதாவை வீழ்த்தியது போக அரசியலில் இத்தனை வருடமாக சாதித்தது என்ன என்ற கேள்வி மனதில் எழுந்ததே , இன்று அது போன்ற அவரது வீர வசனங்கள் ரசிக்கும் மனநிலை இல்லை. மத்தியில் கூட அவரது பேச்சை மதிக்கும் தருவாயில் யாரும் இல்லை , அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நபர் இன்னும் அனுப்பப்பட இல்லை என்றால் ...அவர் மதிக்கப்பட இல்லை என்று தானே அர்த்தம்.
அவர் பழுத்த அரசியல் வாதி தான் , தமிழ் நாட்டில் எந்த விடயத்தையும் அவருக்கு கொழுந்து விட்டு எரிய வைக்கவும் முடியும் ...அடுத்த நாளே அதை மூடி மறைத்து விட்டு சிரிக்கவும் தெரியும். இல்லாவிட்டால் ஆறரை கோடி மக்களின் ஓட்டு மொத்த உணர்வலைகளை வெறும் இய்ம்பது கோடி ரூபாவுக்குள் எப்படி திசைதிருப்பியிருக்க முடியும்.

இன்னும் பல விடயங்கள் தொடர்பில் ஜெயலலிதா போல பக்கம் பக்கமாக விமர்சிக்க முடியும் ..அனால் பின்வரும் காரணிகள் என்னை தடுக்கின்றன.
. அவர் முத்தமிழுக்கும் ஆற்றிய அளப்பெரும் சேவை/மற்றும் திறமை
.அவரை தலைவரராக ஏற்றுக்கொள்ளும் தமிழக மக்களின் உணர்வுகள்
. அவரது வயது
. அவர் மீது எஞ்சி இருக்கும் கொஞ்ச நம்பிக்கை
. அவர் நான் இருவருமே தமிழனாக இருப்பது.
. எனக்கு இங்கு இருந்து கொண்டு அரசியல் பேசுவதில் உள்ள பயம் .

அழிந்து வரும் தமிழ் இனத்தை காப்பற்ற வேண்டிய வரலாற்று கடமை இருக்க இந்த தருணத்தில் , இது போன்ற வீர வசனங்களை , எமாற்றல்களை, பொலி வாக்குறுதிகளை தவிர்த்து செயலில் நிருபித்தால் ..சந்தேகம் எதுவுமில்லை தமிழர்களுக்கு இருக்கும் தகுதியான அரசியல் தலைமை அவர்தான்.

Sunday, January 11, 2009

இந்திய தேர்தல் என் கேள்விகள் பல ..

இந்திய நாடாளுமன்ற தேர்தல் இப்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் விடயமாகிவிட்டது. நேரடியாகவோ மறைமுகமாகவோ எமக்கு நன்மைகளும் பாதிப்புக்களும் இருக்கிறது என்றபடியால் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது என்பது தவிர இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. இப்போது எமக்கென்று ஒரு ஜனநாயகமோ அல்லது நாம் விரும்பும் அரசியல் பிரதிநிதித்துவங்களும் இல்லாத நிலையில் தமிழர்களாகிய நாங்கள் அடுத்த வீட்டு தேர்தலை வேடிக்கை பார்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறோம். (தமிழர்கள் செய்த தேர்தல் புறக்கணிப்பை பற்றி நான் கதைக்க வரவில்லை) இப்படி இருக்கையில் இந்திய தேர்தல் தொடர்பான நிறையவே கேள்விகள் என்னிடம் இருக்கிறது....

  1. ஜெயலலிதா வெற்றி பெற்று தப்பித் தவறியும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்.?
  2. அப்படி கூட்டணி வைத்தால் வைக்கோ என்ன செய்வார்?
  3. மூன்றாவது அணி வெல்லுவதற்கு ஏதாவது வைப்பு இருக்கா?
  4. அப்படி வென்றால் யார் பிரதமர் ஆவார்கள் ? ஜெயலலிதா , பிரகாஷ் காரட் சந்திரபாபு நாயுடு?
  5. தி.மு.க , திர்நாமுள் காங்கிரஸ் தவிர்ந்த காங்கிரசின் கூட்டணி கட்சிகள் எவை?
  6. விஜெயகாந்த் தப்பித்தவறி ஒண்டு இரண்டு வெற்றிகள் பெற்றால் யாருடன் கூட்டணி வைப்பார்?
  7. ராகுல் காந்தியின் பிரதமர் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது.
  8. கருணாநிதி வென்றால் இனி என்ன என்ன நாடகங்கள் எல்லாம் போடுவார்?
  9. நரேந்திர மோடியை பிரதமராக எப்படி ஓட்டு மொத்த இந்தியாவும் ஏற்றுக்கொள்ளும்?
  10. பீகாரில் , நிதிஷ் குமார் ப.ஜ.க வுடன் சேர்ந்ததால் , லல்லு என்ன செய்வார் ? மூன்றாவது அணிக்கா? அல்லது மீண்டு காங்கிரசுடன் பம்முவாரா?
  11. நவீன் பட்நாயக், புத்த தேவ பட்டச்சாரிய ஆகிய முதலமைச்சர்கள் இன்னும் மூன்றாவது அணியுடன் தான் இருக்கின்றனரா?
  12. ப.சிதம்பரம் தனது தொகுதியில் வேல்லுவாரா?
  13. தமிழ் திரை உலகினரின் எதிர்ப்பு எவ்வளவு தூரம் வெற்றி அடையும்?





உலகின் தலைசிறந்த கணக்கு ஆய்வாளர்களே (pricewaterhousecoopers) ஏமாற்றப்பட்ட கதை

உலகின் அதி சிறந்த ஆடிட்டிங் /அக்கௌண்டிங் நிறுவனம் என்றால் (pricewaterhousecoopers) என்ற பேர் முதலிலேயே வந்துவிடும் . நுற்றுக்கு அதிகமான நாடுகளில் கிளை பரப்பி வியாபித்து நிற்கும் தலை சிறந்த நிறுவனம். இந்த நிறுவனதாயே ஒரு இந்திய கம்பனி ஏமாற்றி இருக்குது என்றால் சற்றே வியந்து பார்க்கவேண்டிய விடயம் தான். இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றும் வரை இந்த நிறுவனம் என்ன செய்து கொண்டு இருந்தது. மிகவும் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட அந்த கதை வருமாறு.

இந்த பதிவின் பின்வரும் பகுதி ஆர். முத்துக்குமார் eன்பவரது பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. (http://india360degree.blogspot.com/2009/01/blog-post_10.html)


ஏப்ரல் 2007 முதல் மார்ச் 2008 வரையிலான நிதியாண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 8,473 கோடி ரூபாய். அதில், லாபம் என்று பார்த்தால் வரிகட்டியது போக 1687 கோடி ரூபாய். இப்படி கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் மட்டும் சத்யத்துக்குக் கிடைத்த லாபத்தின் மொத்த மதிப்பு 5,360 கோடி. இதுதான் கடந்த நிதியாண்டு முடிவில் சத்யம் நிறுவனம் சமர்ப்பித்த கணக்கு.ஆனால் திடீரென இப்போது எங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை. முக்கியமாக, நாங்கள் காண்பித்த எண்ணிக்கையில் ஐயாயிரம் கோடி ரூபாய் குறைகிறது, கைவசம் இருப்பது வெறும் 320 கோடி மட்டுதான் என்று அதிர்ச்சி குண்டுகளை வீசியிருக்கிறார் ராமலிங்க ராஜு.


அதிர்ச்சி. குழப்பம். குளறுபடி. எங்கோ தவறு நடந்துள்ளது. தோண்டிப் பார்த்தால் பல சங்கதிகள் புதைந்து கிடப்பது அம்பலமானது.உண்மையில் மற்ற நான்கு மென்பொருள் நிறுவனங்களைப் போல சத்யம் நிறுவனம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. குறைவான லாபத்தையே ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வந்துள்ளது. ஆனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அதிக வருமானம் ஈட்டும் நிறுவனம்தான் பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்துக்குத்தான் அதிகப் பங்கு மதிப்பு கிடைக்கும்.


கொஞ்சம் புரியும்படி பார்க்கலாமா? ராமசாமி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இருபது கோடி என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய லாபம் இரண்டு கோடி. ஆனால் மாடசாமி நிறுவனத்தின் வருமானம் ஐந்து கோடி. லாபம் இரண்டு கோடி. இரண்டுமே ஒரே அளவு லாபம் சம்பாதித்தாலும், உண்மையில் எது சிறப்பான நிறுவனம்? குறைவான வருமானத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனம்தானே. ஆனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ராமசாமி நிறுவனத்துக்குதான் அதிக மதிப்பு. அதன் பங்குமதிப்புதான் அதிகம். காரணம், அவர்களுடைய வருமானம்தான் அதிகம். ஏன் இப்படி என்றால், கொஞ்சம் நிர்வாகம் கவனமாக நடந்துகொண்டால், செலவை சற்றே கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரித்துவிடலாம் என்பது நம்பிக்கை.மேலும் பங்குச்சந்தையில், ஒரே தொழிலில் இருக்கும் நான்கைந்து நிறுவனங்களை முதலீட்டாளர்கள் எப்போதும் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் எல்லாம் இத்தனை சதவிகிதம் லாபம் என்கிறதே, நீங்கள் மட்டும் ஏன் வருமானமும் இல்லை, லாபமும் இல்லை என்கிறீர்கள் என்று சத்யத்தைக் கேள்விகள் கேட்பார்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால், சத்யத்தின் பங்கு விலைகள் அதலபாதாளத்தில் படுத்துவிடும்.இதுதான் சத்யம் நிறுவனத்தலைவர் ராமலிங்க ராஜுவை யோசிக்கவைத்தது.


என்ன மாய மந்திர வித்தைகள் செய்தால் சத்யத்தின் பங்கு மதிப்பை உயர்த்தமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். தொழில்நுட்ப மூளை அல்லவா, நுட்பமாகவே சிந்திக்கத் தொடங்கியது. ஒத்தாசைக்கு நிதித்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சில முக்கியஸ்தர்கள் வந்தனர்.உட்கார்ந்து பேசியதில் அழகான திட்டம் இறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.


சத்யம் நிறுவனத்துக்கு வெளியில் இருந்து வரவேண்டிய தொகையை உயர்த்திக் கணக்கு காட்ட வேண்டும். இது முதல்படி. அடுத்தது. சத்யம் நிறுவனத்தில் இருந்து வெளிநபருக்குச் செல்லவேண்டிய தொகையைக் குறைத்து கணக்கு காட்ட வேண்டும். இது இரண்டாவது படி. இறுதியாக, நிறுவனத்தின் கையில் இருக்கும் ரொக்கம் அல்லது சொத்து மதிப்பு உண்மையைவிட அதிகம் என்பதுபோல கணக்குகளைத் தயார் செய்வது.


வெளியில் இருந்து வரவேண்டிய பணத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக சத்யம் தேர்வு செய்த உத்தி, போலி இன்வாய்ஸ்களைத் தயாரிப்பது. ஊர், பேர் தெரியாத நபர்களுடைய பெயரில் இன்வாய்ஸ்களைத் தயாரித்து கணக்கில் காட்டினார்கள் துணிச்சலாக. இதனால் வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது, போலியாக. ஆனால் இது சத்யம் நிர்வாகிகளுக்கும் கணக்கு வழக்குகளைக் கண்காணிப்பவர்களுக்கு மட்டும்தானே தெரியும்.சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனத்தின் பெயர் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ். அவர்களுடைய வாயை எப்படி அடைத்தார்கள் அல்லது அவர்களுடைய கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்பது இன்னும் வெளியே வராத சங்கதி. அல்லது அவர்களுமே இதற்கு உடந்தையா என்பது மற்றொரு திகில் விஷயம்.பெயரளவில் வருமானம் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்ததால் சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரத்திலேயே இருந்தது. ராமலிங்க ராஜூ எதிர்பார்த்ததும் அதுவே. மெல்ல மெல்ல சத்யம் நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கினார். நிறுவனம் நல்ல நிலையில் இருப்பதாக நிதிநிலை அறிக்கைகள் சொன்னதால் ஏராளமான முதலீட்டாளர்கள் சத்யம் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இறுதியில் ராஜு மற்றும் குடும்பத்தினர் கையில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே இருந்தது. அதையும்கூட வங்கியில் அடமானம் வைத்து கூடுதலாகக் கடன் வாங்கினார் ராஜு.


கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு மேல் தாங்காது அல்லவா? சத்யம் நிறுவன கணக்கு ஏடுகளில் லாபத்தொகை ஏறிக்கொண்டே வந்தது. 5360 கோடி என்ற அளவை எட்டிய பிறகுதான் நிலைமை எல்லை கடந்துகொண்டிருக்கிறது என்பது ராமலிங்க ராஜுவுக்குப் புரிந்தது. ஐயாயிரம் கோடி உதைக்கிறதே என்று உதறல் எடுக்கத் தொடங்கியதும் அதன்பிறகுதான். மிகப்பெரிய குளறுபடியைச் செய்திருக்கிறோம். சிக்கினால் சின்னாபின்னமாகிவிடுவோம் என்ற நிலை. தண்டனை இல்லாமல் தப்பிக்க இன்னொரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார் ராஜூ. விநாச காலே விபரீத புத்தி.இதற்கிடையில், அவருடைய இரண்டு மகன்களும் சேர்ந்து மேதாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Maytas Infrastructure) மற்றும் மேதாஸ் ப்ராபர்டீஸ் (Maytas Properties) என்ற இரண்டு நிறுவனங்களை உருவாக்கியிருந்தனர். நிறுவனத்தின் பெயரான Maytasஐ திருப்பிப் போட்டால் Satyam என்று வருகிறது. சத்யம் நிறுவனத்தை அப்படியே புரட்டிப் போடும் முயற்சி என்பதற்கு இது ஒரு சமிக்ஞை. யாருக்கும் அது அப்போது புரியவில்லை.திட்டம் இதுதான். சத்யம் நிறுவனக் கணக்கு ஏடுகளில் இடித்துக் கொண்டிருக்கும் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அந்த மேதாஸ் நிறுவனங்களை வாங்கியது போல கணக்கு காட்டிவிட்டால் தீர்ந்தது பிரச்னை. அந்த நிறுவனங்களின் அதிபர்கள் தன்னுடைய மகன்களாக இருப்பதால் டீல் முடிவதில் பிரச்னை இல்லை. பேப்பர் அளவில் நிறுவனத்தைக் கையகப்படுத்திவிடலாம், பைசா செலவில்லாமல். அதே நேரம், இல்லாத காசை இருப்பதுபோலக் காட்டி, கொடுப்பதுபோலக் கொடுத்து, தன் பேரில் உள்ள ஏமாற்றல் குற்றச்சாட்டு வெளியாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.


இங்குதான் விவகாரம் வேறு திசையில் திரும்பியது.யார் அந்த மேதாஸ் நிறுவனம்? அவர்கள் இருக்கும் துறை என்ன? மென்பொருள் துறையில் இருக்கும் நாம் ஏன் போய் கட்டுமான நிறுவனத்தை வாங்கவேண்டும்.அப்படியே செய்வதென்றாலும், எதற்காக அந்த நிறுவனத்தை வாங்கவேண்டும்? அதுவும் ஏன் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு? அந்த அளவுக்கு தகுதியான நிறுவனமா அது? தனது குடும்பமே பங்குதாரராக இருக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே இப்படி கொடுக்கல் வாங்கல் செய்வதில் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லையே? இது ஏன்? கேள்வி மேல் கேள்வி கேட்டனர் சத்யம் நிறுவனப் பங்குகளின் முதலீடு செய்தவர்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராமலிங்க ராஜு. எதிர்ப்பு வலுப்படவே அந்தத் திட்டத்தை அடுத்த நாளே கைவிடுவதாக அறிக்கை விட்டார் ராஜு.வால் போய் கத்தி வந்த கதையாக இப்போது அடுத்த பிரச்னை எழுந்து நின்று பயமுறுத்தியது. நிறுவனத்தில் வரும் லாபத்தில் கணிசமான தொகையை முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் என்ற பெயரில் தருவது நிறுவனங்களின் வழக்கம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகாலக் கணக்கை எடுத்துப் பார்த்ததில் கடந்த அதில் மூன்று ஆண்டுகளில் டிவிடண்ட் என்பதையே முதலீட்டாளர்களுக்குத் தரவில்லை சத்யம். ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு சத்யம் வலுவாக இருக்கும்போது ஏன் டிவிடண்ட் தரக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.தலையே சுற்றுவது போல இருந்தது ராமலிங்க ராஜுவுக்கு. பணம் இருந்தால்தானே ஐயா, தருவதற்கு? போதாக்குறைக்கு சத்யம் நிறுவனத்தில் இயக்குனர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிலர் தமது பதவிகளை வரிசையாக ராஜினாமா செய்தனர்.அதே நேரம் பார்த்து உலக வங்கி, சத்யம் நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சேவை ஒப்பந்தங்கள் சிலவற்றை விலக்கிக்கொண்டு, சத்யம் நிறுவனத்தை எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்துள்ளது என்ற தவல் கசிந்தது. ராஜுவும் குடும்பத்தினரும் கையில் வைத்திருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர் என்றும், இப்போது பங்கு விலை இறங்கிக்கொண்டே வருவதால் கடன் கொடுத்த வங்கிகள் அந்தப் பங்குகளை பொதுச்சந்தையில் விற்று பணம் செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.இனியும் உண்மையை மூடி மறைத்தால் உயிரோடு விடமாட்டார்கள் முதலீட்டாளர்கள் என்பதால் பகிரங்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் ராஜூ.அதிர்வுகள் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தேசியப் பங்குச்சந்தையிலும் மும்பை பங்குச்சந்தையிலும் ஒரே நாளில் 160 சொச்சம் ரூபாயிலிருந்து 75 சதவீதம் அதிரடியாகக் குறைந்து சுமார் 40 ரூபாய்க்கு வந்துள்ளது. நியூ யார்க் பங்குச்சந்தையில், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதை நேற்று தடை செய்துள்ளனர். இந்தப் பங்கின் விலை மேலும் இறங்கும் அபாயம் இருக்கிறது. இதனால் அந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் நிலை அதளபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.தவிரவும், நிறுவனம் பலமாகச் சேதமடைந்துள்ளதால் அதில் வேலை பார்த்துவரும் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி உலகத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

Wednesday, January 7, 2009

Airtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா?

தொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையும் செயற்பாடுகளையும் முடுக்கி விட்டிருக்கின்றன. இந்தியாவின் அதிகமான வாடிக்கையாளர்கள் இப்போது இந்த நிறுவங்களின் பொருள்களையே அதிகம் ஆதரிக்கிர்றார்கள். iதனால் இந்திய நிறுவனங்களின் செயற்பாடு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இழப்புக்களை ஈடு செய்ய இலங்கை போன்ற ஒரு சின்ன நாட்டிடம் தன் திறமையை காட்ட வந்திருக்கிறது இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனம். எப்போதுமே இந்தியா இலங்கை தொடர்பில் தவறான முடிவுகளையே எடுத்திருக்கிறது என்பது வரலாற்று உண்மை. இந்தியன் IOC கூட இலங்கை அரசிடம் கட்டுப்பட்டு அவர்கள் சொல்வது போலவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பெருந்தொகையான பணம் மானியம் என்ற வகையில் இலங்கை அரசிடம் இருந்து இந்தியன் IOC கு செலுத்தவேண்டி இருக்கிறது. இன்றும் பலத்த நட்டத்துக்கு மத்தியில் தான் ioc இயங்குவது குறிப்பிடத்தக்கது. அனைத்தையும் தாண்டி இந்தியன் IOC வியாபாரம் என்பதை விட அரசியல் தேவைகளுக்காகவே இயங்குவது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பல தோல்விகளும் சம்பவங்களும் பாடங்களாக இருக்க , பல பில்லியன் ரூபாய்களை அனுமதிப் பணமாக செலுத்தி உள் நுழைந்து இருக்கும் AIRTEL என்ன சாதிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படியே இயங்கினாலும் பல்வேறு நெருக்கடிகள் airtel நிறுவனத்துக்கு காத்திருக்கிறது. எனவே இன்னும் இரண்டு ஆண்டுகளில் airtel நிறுவனமும் வழமையாக நடப்பது போலவே இலங்கையின் கபட ராஜ தந்திரத்தில் தோற்றுப்போய் இங்கிருந்து தனது நடவடிக்கைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தாலும் வியப்பதற்கு இல்லை. இந்திய கம்பனி என்றவுடன் எம்மவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நிண்டு விண்ணப்பம் வாங்குகிறார்கள். இவர்கள் என்ன நம்பிக்கையில் வாங்குகிறார்கள் என்று புரியவில்லை. தன் நாட்டில் கூட பல்தேசிய கம்பனிகளிடம் போட்டியிட முடியாமல் இருக்கும் இந்த இந்திய கம்பனிகள் தன் நாட்டில் கூட ஏதும் சாதித்ததாக சரித்திரம் இல்லை.



இன்று கூட சத்யம் என்ற மென்பொருள் கொம்பனி கணக்குகளில் தில்லு முல்லுகள் செய்ததன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டால் ஓட்டு மொத்த இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மீதும் கரி பூசப்பட்டு இருக்கிறது.


உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிட தக்கது. ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூத்து என்னவென்றால், உலகத்தில் பெரிய அக்கௌண்டிங் நிறுவனங்களுள் ஒன்றான Price Waterhousecoopers தான் இவர்களது ஆடிட்டர்கள்!

ஐநூறு ஆண்டுகளாய் தொடர்ந்தும் வெள்ளையனிடம் ஏமாறும் இந்தியா....

அப்துல் கலாம் போன பின் இந்தியாவின் வல்லரசு கனவுகளும் இந்திய அரசின் கையாலாகத தனத்தினால் கிடப்பில் போடப்பட்டே இருக்கிறது. சந்திராயன் போன்ற சின்ன சின்ன சாதனைகளை வைத்துக்கொண்டே இந்திய சந்தோசப் பட்டுக்கொள்ளும் ஆயின் இன்னும் பலநூறு வருடங்களுக்கு வல்லரசு கனவுகளின் வடிவம் மட்டுமே மாறி கொண்டு இருக்கும். கனவுகள் அப்படியே தான் இருக்கும். இந்தியர்களும் வழமை போலவே அமெரிக்காவுக்கு பின் தள வேலைகளை மட்டுமே செய்து கொண்டு இருப்பார்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் சந்தை வாய்ப்புக்களுக்காக மட்டுமே உலக நாடுகள் இந்தியாவில் அக்கறை காட்டுகின்றன. முடியுமானவரை இந்தியாவில் தமது தொழிலை நிறுவி , மிக மலிவான விலையில் ஊழியத்தையும் சுரண்டிச்செல்வதுமே அந்த நாடுகளின் அக்கறையின் பின்னணி. இதன் அடிப்படையிலேயே பல கணக்கில் அடங்காத வெளிநாடு நிறுவனங்கள் தமது தொழிலை இந்தியாவில் நிறுவி வியாபித்து , கிளை பரப்பி மக்களின் பணத்தை சுரண்டி தங்கள் நாட்டுக்கு இலாபமாக எடுத்து செல்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களை விட இந்தியாவில் கால்பதித்திருக்கும் வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களே அதிக சந்தைப்பங்கும் இலாபமும் கொண்டிருக்கின்றன.


உதாரணமாக தொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையும் செயற்பாடுகளையும் முடுக்கி விட்டிருக்கின்றன. இந்தியாவின் அதிகமான வாடிக்கையாளர்கள் இப்போது இந்த நிறுவங்களின் பொருள்களையே அதிகம் ஆதரிக்கிறார்கள். இதேபோல வங்கித்துறையில் ing, விளம்பரத் துறையில் leo burnard, எண்டு எந்த துறையை எடுத்தாலும் எதோ ஒரு பல்தேசிய கம்பெனி தான் முன்னிலையில் இருக்கிறது.


இந்தியாவில் ஒவ்வொரு மூன்று வினாடி தோறும் ஒரு LG தயாரிப்பு விற்பனை யாகிறதாம். இதை அந்த நிறுவனமே பெருமையாக சொல்கிறது..இதையும் இந்தியர்கள் சந்தோசமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருபத்தைந்து வருடமாக இந்தியர்கள் maruthi suzuki யிலேயே வீடு திரும்புகிரார்கலாம். எனவே இருபத்தைந்து வருடமாக அந்த நிறுவனத்தின் இலாபமும் ஜப்பானுக்கு அனுப்படுகிறது எண்டு தானே அர்த்தம். இப்படி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம் , கடைசியாக தமிழகத்துக்கு வந்த catapiller வரை.


அன்று வெள்ளைக்காரன் மிளகு , கராம்பு, பட்டுத்துணி என்று இந்தியாவில் மக்களின் உழைப்பை வைத்தே தனக்கு தேவையானவற்றை திருடி/சுரண்டிச் சென்றான் , இன்றும் வெள்ளைக்காரன் தனக்கு தேவையா மலிவான உழைப்பையும் , தேவையான பணத்தை இலாபம் என்ற முறையிலும் திருடிச்செல்ல சட்ட பூர்வமாக அனுமதிக்கிறோம் என்றால் .....ஐநூறு வருடமாக நாம் மாற வில்லை எண்டு தானே அர்த்தம்.

எனவே தேவை இல்லாத வல்லரசு கனவுகள் காண்பதை விட்டு , அன்று போல் இன்றும் நாம் வெள்ளையனிடம் ஏமாறும் அடிமைகளே என்பதை வரட்டு கவ்ரவம் பார்க்காமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Monday, January 5, 2009

அடுத்த முட்டை அடி யாருக்கு? தமிழகம் தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள்


சுபிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.


இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதே வேளை இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த சு.சுவாமி எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.(முகில் ,http://www.writermugil.com/?p=380)

தொடர்ந்தும் அவர் இனியும் தொடர்ந்து தங்க பாலு , சோ போன்றோரும் என்போல பதிக்கப் பட்டால் , அவர்களுடன் கூட்டணி வைத்து , பாதிக்கப்பட்ட எல்லோரும் மண் மோகன் சிங்கை சந்தித்து மர்கஜர் கொடுக்க டெல்லி பயணமா இருப்பதாக தெரிவித்தார்.
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes