BREAKING NEWS

Like Us

Saturday, December 27, 2008

அடுத்த வருடத்தில் எந்த பங்குகளில் முதலிடுவது சிறந்தது? ஒரு சொதப்பல் ரிப்போர்ட்

நீங்கள் இப்போது வீடுக்கு போகலாம் அல்லது you are fired என்ற ஆங்கில வார்த்தைகள் தான் அடுத்த வருடத்தில் அனைத்து வியாபர நிறுவனங்களிலும் அதிகம் பாவிக்கப்படும் வார்த்தையாக இருக்கப்போகிறது. நிறுவங்களில் நிதி ஈட்டத்துடன் சம்பந்தப்பட்ட பங்குச்சந்தை , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கிப்போய் உள்ளதாலும் நிறுவங்களின் முதலானவராகவும் மதிக்கப்படுபவராகவும் கருத்தப்படுகின்ற சாதாரண நுகர்வோனிடம் செலவிடக்கூடிய பணத்த்தின் அளவு குறைவாக உள்ளதாலும் இனிவரும் காலங்களில் தனது வியாபர நடவடிக்கைகளை மட்டுப்படுத்த அல்லது குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.

காப்பீட்டு கம்பனிகளையும் வணிக வங்கிகளையும் மட்டும் தான் நிதி நெருக்கடி பாதிக்கும் என்று யாராவது சொன்னால் நம்பவேண்டாம் , நிதி நெருக்கடியில் விளைவுகள் ஒரு சங்கிலித்தொடராக அனைத்து வகையான வியாபாரங்களையும் பாதித்து வருகிறது. கடந்த வாரங்களில் Toyata , GM எண்டு ஆடம்பர வாகனங்களில் தலைவிரித்து ஆடிய பிரச்சனை , எதிர்வரும் காலங்களில் அரிசி, மாவு, கத்தரிக்காய் எண்டு சகலதையும் பாதிக்கும் எண்டு நோக்கர்கள் கருதுகிறார்கள். நிறைவு பெறுகின்ற இந்த இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் எந்த ஒரு நிறுவனமும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி எந்த ஒரு ஊழியருக்கும் போனஸ் மற்றும் எந்த ஒரு மேலதிக அனுகூலங்களும் வழங்கவில்லை. அடுத்த வருடத்தில் இருந்து ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் படலம் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தப்படும். எனவே வேலை இழக்கும் பலரும் என்ன செய்வினம் எண்டு யோசித்தால், பிவரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.


பெரிய நிறுவனங்களில் இருந்து வேலை இழப்போர் , மிகுந்த வேதனையுடன் தமது தகுதிகளை பெருக்கிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவர். இதனால் எதிர்வரும் காலத்தில், MBA, MSC மேன்நிலை கல்விக்கான கேள்வி அதிகரிக்கும் , பலர் தம்மிடம் இருக்கும் கொஞ்ச பணத்தையும் கல்வி நிறுவனக்களுக்கு அளித்து அவற்றின் வருவாய் பெருக்கத்துக்கும் உதவுவர். சின்ன சின்ன tutory கலில் கூட mba clas நடக்கலாம். எனவே கல்வி சார்ந்த போட்டியும் தேடலும் பன்மடங்கு அதிகரிக்கும்.


இன்னும் சில வேலை இழப்போர் , சுய தொழில் எண்டு பல தொழிலும் செய்வர். ஒருவர் மட்டும் செய்யும் தொழில்கள் அதிரடி வேகத்தில் அதிகரிக்கும். அடி மட்ட வேலை வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். ஒரே தொழிலில் பல பிரதிஈடுகள் கிடைக்கும் . மிக மலிவான விலையில் மனித ஊழியத்தை விலைக்கு வாங்கலாம். இதனால் தொழில் சார்ந்த அடி பிடி சண்டைகள் பல்கிப் பெருகுவதாலும் , வேலை இன்மையால் ஏற்படும் மன அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகளாலும் மருத்துவமனைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.


எனவே அடுத்தவருடத்தில் பங்குச்சந்தையில் முதலிட இருப்பதாயில் , கல்வி நிறுவனங்களின் பங்குகளிலும், ஆஸ்பத்திரிகள் மருத்துவமனைகளின் பங்குகளிலும் முதலிட்டால் கூடிய லாபம் உழைப்பதுடன் முதலீடை ஆபத்து இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும்.

Share this:

umaram said...

இதையும் சேர்த்து கொள்ளலாம், கோவில்களில் முதலிடலாம்,
மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் போது, தன்னம்பிக்கைய இழப்பார்கள், கோவில்களில் அதிகம் பணத்தை செலவிடுவார்கள் , அதாவது அதிகம் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பார்கள், கோவில்களின் வருமானம் பெருகும், ஏன் சாமியார், சாத்திரிமார் காட்டிலும் மழை தான்...................

RAMASUBRAMANIA SHARMA said...

Though the article seems to be delevering messages in a comedy way, the points mentioned are 100% true.The present trend shows,there are lot of possibilities, which will prove undoubtedly,the increase in the market values of the mentioned businesses(though hospitals & Doctors are supposed to deliver service to the common public, the other side looks like corporate businesses only)...In this highly competitive world, all essential services have also becoming like business sectors...However, still numerous Hospitals & Doctors are still giving their whole hearted care & services to their patients. O.K. I think, I have come a long way, deviated the main article...At the outset, I really appreciate the article writer, who has given lot of VALID points in a light way...Excellent...

Ragulan said...

Good one.keep going sutha.i became the daily reader of your blog

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes